பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை தமிழில் மெட்டிஒலி என்ற சீரியலின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் வெற்றி என்ற நிலைதான்.
பல மெகா சீரியல்களில் நடித்துள்ள இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலில் நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல பிரபலம் கிடைத்தது என்று கூறலாம். சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி வருபவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை இவர் சீரியல் மட்டும் இல்லாமல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்றயடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கிறார்.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது தலைவா படத்தில் வரும் “நான் சமைக்க ஆரம்பிச்ச.. எல்லார் வாயிலையும் எச்சில் ஊறும்” என்ற ஒரு நகைச்சுவை வசனத்திற்கு ரீல்ஸ் விட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.