நடிகை வாணி போஜன் சமீபத்தில் இயக்குனர் ஒருவர் தன்னை திட்டியது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் குமரேசனிடம் நான் நிறைய திட்டு வாங்கி இருக்கின்றேன்.
பொது இடத்தில் இருக்கிறோம் என்பதால் கத்தாமல் இருக்கிறேன் என்று சொல்லுவார். அப்பொழுது என்னுடைய கண்கள் கலங்கி ஏன் தான் இந்த வேலைக்கு வந்தோமோ என்றெல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
ஆனாலும் அதனை நான் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டது கிடையாது. அதுமட்டுமல்ல படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் படக்கூடிய கஷ்டம் என்ன என்று அருகில் இருந்த நான் பார்த்து இருக்கின்றேன்.
நடிகர்களைவிட ஜூனியர் ஆர்டிஸ்ட்களைவிட இயக்குனர்களுக்கும் துணை இயக்குனர்களுக்கும் இருக்கக்கூடிய வேலைப்பளு என்பது நிஜமாகவே அதிகம். கண்டிப்பாக அவர்கள் கோபப்பட தான் செய்வார்கள் என்பதை புரிந்து இருக்கின்றேன்.
என்னிடம் எவ்வளவு கோபமாக பேசினாலும் அடுத்த நிமிடமே சாதாரணமாக பேசுவார். அவருக்கு நான் எப்போதுமே பெரிய நன்றிக்கடன் பட்டவளாக இருக்கின்றேன். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்கு மிகவும் மெனக்கெடும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் குமரேசன்.
மட்டுமில்லாமல் என்னுடைய விருப்பமே இல்லாமல் பல படங்களில் நான் நடித்து இருக்கிறேன். வெறும் பணத்திற்காக மட்டும் சில காட்சிகளில் விளம்பரப் படங்களில் திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றேன் என்று சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை வாணி போஜன்.