“தீடீர்ன்னு.. என் பக்கத்துல வந்து.. என்னை உரசி அசிங்கமாக..” – மோசமான அனுபவத்தை ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராணி..!

சீரியல்களில் வில்லியாக நடிக்கும் நடிகைகள் எப்படி நடிக்க வேண்டும் என்ற பாடத்தை நடத்தியவர் நடிகை ராணி. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தாலும் தனது கம்பீரக் குரலால் வில்லத்தனமான நடிப்பாலும் ரசிகர்களை மிரட்டியவர் சீரியல் நடிகை ராணி.

இவர் சீரியலில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வில்லியாக நடித்து வந்தார். தற்போது காவல்துறை அதிகாரி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சீரியலில் வில்லியாக நடிப்பதற்கு ரோல்மாடலாக ஒரு நடிகை இருப்பார் என்றால் அது நடிகை ராணியை கூறலாம்.

சின்னத்திரையில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு என்னை நேரில் பார்ப்பவர்கள் கூட திட்டி இருக்கிறார்கள். இதனை நான் அவமானமாக கருதவில்லை என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன் அந்த அளவுக்கு வில்லி கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் என்று பெருமைப் படுகிறார் நடிகை ராணி.

கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த அலை என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தடம் பதித்தவர் நடிகை ராணி. சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி என அடுத்தடுத்த சீரியல்களில் வில்லி தோற்றத்தில் நடித்து தனக்கான தனி அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டார்.

முதலில் இவரை ராணி என பலரும் குறிப்பிட்டார்கள். அதன்பிறகு சொந்தம் ராணி என்று கூறினார்கள். அதன் பிறகு அத்திப்பூக்கள் ராணி என்று கூறினார்கள். இப்படி தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் தனக்கான தனி முத்திரையைப் பதிக்கும் இவர் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான குல தெய்வம் என்ற சீரியலில் குடும்பப் பாங்கான பெண்ணாக பவ்யமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்பொழுது மூன்று சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை ராணி. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று மனதளவில் பாதிக்கப்பட்டாதாக இவர் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் நான் அமர்ந்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் பின்பு ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மறுக்காமல், நானும் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன். அவர் கேட்டது போல புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். திடீரென என் அருகில் வந்து என்னை உரசி அசிங்கமாக நடந்து கொண்டார்.

அடுத்த நிமிடமே, ஹலோ.. உங்களுக்கு என்ன வேணும்..? தள்ளி நில்லுங்க.. என்று கோபமாக கேட்டேன். அதற்கு நீ தான் வேண்டும் என்று கூறிய கூறினார். இது என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிறகு என்னுடைய காதுக்கு அருகில் வந்து கத்தி விட்டு ஓடி சென்று விட்டார். அதன் பிறகு தான் தெரிந்தது இது ஒரு பிராங்க் ஷோ என்று இந்த நிகழ்ச்சியால் எனக்கு மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஒரு வாரம் நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் நடிகை ராணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …