நடிகை ஷகிலா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய பொழுது என்னுடைய வாழ்க்கை தரம் உயராமல் போனதற்கு எனக்கு இருந்த கெட்ட பழக்கம் தான் காரணம் என்று நான் கூறுவேன்.
அதில் முக்கியமானது இந்த குடி பழக்கம் மற்றும் புகை பழக்கம். இவை இரண்டும் தான் என்னை பொருளாதார ரீதியில் முன்னேற விடாமல் செய்துவிட்டது என்று நினைக்கிறேன்.
இளம் வயதில் எல்லாம் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டு பெக் போட்டா தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு மதுவிற்கு அடிமையாக இருந்தேன். தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன் என்று தன்னுடைய குடிப்பழக்கம் குறித்து வெளிப்படையாக கூறி இருந்தார் நடிகை ஷகிலா.
பொதுவாகவே நடிகைகள் இப்படியான பழக்கங்களை வெளியே சொல்வதற்கு கூச்சப்படுவார்கள் மறைத்து விடுவார்கள். ஆனால், நடிகை ஷகிலா வெளிப்படையாக இந்த விஷயங்களை குறித்து கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறினேன். நான் கூறியது மலையாளத்தில் அந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதுதானே தவிர திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை.
இதனை தவறாக புரிந்து கொண்டார்கள் சினிமா இயக்குனர்கள். அதனால் எனக்கு நான்கு ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். ஆனாலும் பட வாய்ப்பு இல்லை பொருளாதார பிரச்சினை என்ற ஒன்றை நான் சந்திக்காமல் தான் இருந்தேன்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல எனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. அப்போது தெலுங்கில் ஜெயம் படத்தை இயக்கிய இயக்குனர் தேஜா என்னை தொடர்பு கொண்டு சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அவருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
அதன் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறேன் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார் நடிகை ஷகிலா. இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.