தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி ஹீரோவாக நடிக்கும் சைரன் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ஆயுதம் என்ற திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கும். இது திரைப்படத்தின் போலீஸ் கான்ஸ்டபிளாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.
அதன்பிறகு சில நபர்களால் நம்முடைய குடும்பம் சீரழித்து விட்டது என்பதை உணர்ந்து அவர்களை பழிவாங்கும் படலத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என்றாலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.
மேலும் கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறாராம் கீர்த்தி சுரேஷ். இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், தன்னுடைய ஆண் நண்பர் என்று கூறிக்கொள்ளும் தன்னுடைய வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த ஆண் நண்பராக அதாவது அந்த நாயாக நாங்கள் இருக்கக் கூடாதா என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.