தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயளாராக இருக்கக்கூடிய நடிகர் விஷால் தமிழ் திரைப் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.
சமீபகாலமாக அவர் நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்குக் காரணம் அவர் மீது நிறைய புகார்களும், ஷூட்டிங்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளே காரணம். எனவே தான் இவரை வைத்து திரைப்படங்கள் இயக்குவதற்கு தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
தற்போது விஷாலின் நண்பர்கள் இவரை வைத்து லத்தி என்ற படத்தை இயக்கி உள்ளனர் இந்த படத்தை வரும் செப்டம்பர் 15 இல் வெளியிடலாம் என்று நினைக்கிறார்கள். இந்தப் படம் குறித்த தேதியில் வெளிவருமா இல்லையா என்பது யாருக்குமே தெரியவில்லை.
மேலும் விஷால் இரட்டை வேடத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இவருடன் ரிதுவர்மா, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்காக வெறும் 40 நாட்கள் மட்டும்தான் சூட்டிங் சென்று இருப்பதால் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இவர் மீண்டும் விஷாலை சூட்டிங்கிற்கு வரவழைக்க நடிகர் கார்த்தியிடம் புகார் கொடுத்திருக்கிறார். கார்த்தியும் இவர் நண்பர் என்பதால் சரி, சரி பார்த்துக்கொள்ளலாம். இப்ப விடுங்க… என்று பேசி முடித்து விட்டார்.
இதனால் மூன்று கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்து இருக்கக்கூடிய எந்த தயாரிப்பாளர் கார்த்தியிடம் நடக்காதது உதயநிதியிடம் நடக்குமோ என்ற ஆவலில் அவரிடம் புகார் கொடுக்க செல்லும் போது அங்கேயும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ன முடியுமோ பார்த்துக்கோ என்ற பாணியில் குரல் எழுப்பியிருக்கும் விஷாலால் தலையில் துண்டை போட்டுக்கொண்டு இருப்பதாக புலம்பித் தள்ளுகிறார் தயாரிப்பாளர்.
விஷாலை எதிர்த்துக் கொண்டு புகார் கொடுக்கும் போகும் இடமெல்லாம் அவர்கள் நட்பு வட்டாரம் அவரைத் தாங்கி தூக்கிப் பிடிக்கிறது. இவரால் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி தாங்குவது இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார் தயாரிப்பாளர்.