மக்கள் அனைவராலும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாட படக்கூடிய பண்டிகைகளில் ஒன்றுதான் ஓணம். தேவ மக்கள் குடும்பத்தோடு ஒன்று கூடி கொண்டாடக் கூடிய மிக முக்கியமான பண்டிகையாக இது கருதப்படுகிறது இந்த பண்டிகையையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மாமன்னர் படக்குழுவினர் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி அதன் படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறது பார்ப்பதற்கே மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.
எல்லா நடிகைகளுமே கேரளாவில் உடுத்த கூடிய புடவைகளை உடுத்திக் கொண்டு அவரவர் போட்டோக்களை இன்ஸ்டா வில் பதிவு செய்திருந்தார்கள். அதே… குறிப்பிடத்தக்க வகையில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் மாமன்னர் படக்குழு ஒரு இணைந்து அமர்ந்து விருந்து உண்ட புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்தது.
அதேநேரத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவை மற்றும் தலையில் வைத்திருந்த மல்லிகை பூவை பார்த்தாலே ரசிகர்கள் இறங்கி வீழ்வது போல் அவரது படம் இருந்தது.
தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழி படங்களிலும் நடித்து வரக்கூடிய கீர்த்தி சுரேஷுக்கு தற்போது தமிழில் மாமன்னன், தெலுங்கில் தசரா, போலா சங்கர் என பல படங்கள் உள்ளன. மேலும், தளபதி 67 படத்திலும் இவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்ததால் குடும்பத்தோடு ஓணத்தை கொண்டாட முடியவில்லை. எனவேதான் மாமன்னர் குழுவுடன் இணைந்து நான் ஓணம் பண்டிகையை தாறுமாறாக கொண்டாடி இருக்கிறேன்.மேலும் ரசிகர்களை ஏமாற்றாமல் இருப்பதற்காக காரில் செல்லும் போது ஓணப்பாடலை பாடி கீர்த்தி சுரேஷ் அசத்தியிருக்கிறார்.
தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பார்க்கக்கூடிய அனைத்து ரசிகர்களும் மிகவும் ஆச்சரியத்தோடு லைக்குகளை வாரி குவிக்கிறார்கள். உதயநிதி இருக்கும் போட்டோக்கள் மற்றும் வடிவேலுவுடன் சேர்ந்து கொண்டிருக்கும் போட்டோக்களை அவர்கள் விரும்பிப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
தன் குடும்பத்தை விட்டு மற்றொரு சினிமா குடும்பத்தோடு ஓணம் கொண்டாடியது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்