சின்னத்திரை சினேகா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ஸ்ரித்திகா சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இந்த சீரியலை தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, வைதேகி, உறவுகள், சங்கமம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தற்போது மகராசி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதும் இன்னும் அதே இளமையுடனும் அதே பொலிவுடனும் காணப்படுகிறார் ஸ்ரித்திகா. சொல்லப்போனால் நாளுக்கு நாள் இவருடைய அழகு மெருகேறிக் கொண்டே தான் போகின்றது.
இந்நிலையில், தன்னுடைய இளமைக்கும் அழகுக்கும் என்ன காரணம் என்று பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி எடுத்திருந்தார் நடிகை ஸ்ரித்திகா, அதில் அவர் கூறியதாவது, நான் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் சோப்பு போட்டு குளித்தது கிடையாது.
பாசி பருப்பு, பாதாம் பருப்பு, கடலை போன்றவற்றை மாவு போல அரைத்து பூசி குளிப்பேன். அதிகமாக மேக்கப் போடுவது எனக்கு பிடிக்காது. அதிகமாக நான் பயன்படுத்தக்கூடிய ஒரு மேக்கப் உபகரணம் என்றால் கண்ணுக்கு மை வைப்பேன் அவ்வளவுதான்.
சூட்டிங் போது கூட லைட்டான மேக்கப் தான் போடுவேன். அதேபோல மேக்கப்பை கலைக்க தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் போன்றவற்றை உபயோகப்படுத்துவேன் என்று கருதுகிறார்.
இந்நிலையில் தன்னுடைய முதுகின் அழகை பளிச்சென தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய முதுகு இலையே சாப்பிடலாம் போல இருக்கு என்று வர்ணித்து வருகின்றனர்.