பெயரிடாத படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!

 நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது  அவரை விவாகரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து நற்பெயரை பெற்றிருக்கிறார்.

சதந்தா ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

 தற்போது ஐந்து மொழிகளில் உருவாகி வரும் யசோதா என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவரோடு நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடித்துவருகிறார். படத்தை கிருஷ்ண பிரசாத் இயக்கி வர மணிசர்மா இசையமைக்கிறார்.

 அதிக எதிர்பார்ப்பில் காக்கக்கூடிய எந்த படம் விரைவில் வரும் என்ற நிலையில் தற்போது வரை வெளியிடப்படவில்லை. முழுவதும் வெளியிடப்பட திட்டமிட்டிருந்த இந்தப் படத்தின் டீசர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 அன்று இந்த படம் வெளிவரும் என்று நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

 இந்நிலையில் நடிகை சமந்தா அமர் கௌஷிக் இயக்கக்கூடிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் ஒரு வேடத்தில் இளவரசியாகவும் மற்றொரு வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது. இடப்படாத இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவர் இணைந்து நடிக்கப் போகிறார் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

 இந்தப் படத்தில் சமந்தாவிற்கு இரட்டை வேடம் என்று கூறியதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள் பேய் வேடத்தில் இவர் என்னென்ன சேட்டைகள் செய்யப்போகிறார் என்பதை ரசிகர்கள் இப்போதே கணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தற்போது நடிகை சமந்தா கைவசம் சகுந்தலம், யசோதா, குஷி போன்ற படங்களும் பாலிவுட்டிலும் 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் சமந்தா.

எனவே அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளி வரும் என கூறப்படுகிறது. மேலும் இவர் தமிழிலும் தளபதி 67 படத்தில் அவர் வில்லியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …