தமிழில் மிகச் சிறந்த வெற்றிப்படங்களை தந்த சூப்பர் குட் பிலிம்ஸ் இன் உறுப்பினர் ஆர்பி சவுத்ரி இவரது மகன் மிகச் சிறந்த தமிழ் நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது படத்தில் தளபதி விஜய் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று இவரது மகன் ஜீவா தெரிவித்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஆர்பி சவுத்ரி அவரைப்பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும் ஏறக்குறைய இந்த கம்பெனி தயாரிப்பின் மூலமாக ஏறக்குறைய 100 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது இந்த கம்பெனி ஆனது மலையாளத்தில் பகத் பாசில் நடித்த படத்தை தயாரிப்பதாக அறிவித்தார்கள்.
மேலும் அந்த மலையாளப் படத்துக்கு ஹனுமன் கியர் பெயரை வைத்திருந்தார்கள். இதே படத்தை தெலுங்கில் வெளியிட திட்டம் இருப்பதால் தெலுங்கு படத்திற்கான தலைப்பாக டாப் கியர் என்ற பெயரை சூட்டினார்கள்.
தற்போது இதற்கான போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் ஏற்கனவே தெலுங்கில் இதுபோன்ற ஒரு திரைப்படத்திற்கு இந்த டாப் கியர் என்ற பெயரே வைக்கப்பட்டு இருந்ததால் அத்திரைப்படத்தை சார்ந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கின்ற இந்த படத்தின் தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் பயன்படுத்தி உள்ளதால் சம்மந்தப்பட்ட தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆர்பி சவுத்ரி நேரில் அணுகி இந்த விஷயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து ஆர்பி சவுத்ரி அவர்களது உண்மை நிலையை உணர்ந்து கொண்டு நாங்கள் டைட்டிலை மாற்றி வைத்துக் கொள்கிறோம் என்று மிகவும் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருக்கிறார்.
இதனால் இந்த தயாரிப்பு நிறுவனம் எந்த விதமான சிக்கலையும் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பக்குவமாக ஆர்பி சவுத்ரி நடந்து கொண்ட விதத்தை பாராட்டியிருக்கிறார்கள்.
எந்த பிரச்சினை என்றாலும் நிலைமையின் தன்மையை புரிந்து பேசி அனைத்தையும் சரி செய்ய முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்.