பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூ – வுக்கு 7 கோடியா? அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்!

 

 தமிழ் திரையுலகில் 1999ஆம்  ஆண்டு திரையுலகிற்கு வெளிவந்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். சூர்யாவிற்கு வாலி படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இதை அடுத்து பல  படங்களை இவர் இயக்குனர் குறிப்பாக  குஷி படத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த படத்தில் படமாக்கப்பட்ட விதம், கதை இவை அனைத்துமே மிக நேர்த்தியான முறையில் இருந்தது.

 இவர் இயக்குனராக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எப்போதுமே இருந்து கொண்டு இருந்ததால் இயக்கத்தை நிறுத்திவிட்டு நடிகர் அவதாரம் எடுத்து விட்டார்.

ஆரம்ப நாட்களில் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதன் மிகப் பெரிய வெற்றி அடையவில்லை. எனவே இவர் நெகட்டிவ் கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக இவர் வில்லனாக நடித்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தது. இதன் மூலம் அடுத்தடுத்த படங்களில் இவரை வில்லனாக நடிக்க அழைப்புகள் வந்தது.

 இதை அடுத்து தமிழ் திரையுலகில் இவர் ஒரு நிரந்தர வில்லனாக மாறி விட்டார். இப்போது பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஜெண்டில்மேன் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு எஸ் ஜே சூர்யாவிற்கு வந்துள்ளது.

 இந்த படத்தில் இவர் நடிப்பதற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதுவரை இயக்குனராக இருந்த போது கூட இந்த அளவு சம்பளத்தை இவர் பெற்றிருக்க மாட்டா.ர் தற்போது தனது திரையுலக வாழ்க்கையில் முதன்முறையாக அதிகளவு சம்பளம் இந்த படத்திற்காக வாங்கப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து எஸ்ஜே சூர்யா பேசும்போது ஷங்கர் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய டைரக்டர். இவரிடம் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. அனைவரிடமும் அன்பாக பழகுவார். மீண்டும் எனக்கு  இயக்குனர் ஷங்கரோடு இணைந்து இரண்டாவது படம் பண்ணுவதற்கான வாய்ப்பு கிடைப்பது கிடைத்தது மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …