இப்போது தமிழில் விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி மிகவும் பிசியான நடிகராக உள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் ஹிந்தி என்று அடுத்தடுத்து பல மொழிகளில் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போதுதான் மலையாளத்தில் இவர் நடித்த ஒரு படம் வெளியானது. இதில் மூன்று படங்களை தன் கையில் வைத்திருக்க கூடிய இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் ஏராளமாக வந்து குவிகிறது அந்த பக்கமும் அவர் நடித்து வருகிறார்.
ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தன்னைப் பிரதிபலித்துக் காட்டிக்கொண்டு இருக்கக்கூடிய விஜயசேதுபதி பாலிவுட்டில் மூன்று படங்களில் கமிட் ஆகி இருக்கக்கூடிய இவர் தங்க தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில் தனி பிளாட்டை கொடுத்திருக்கிறார்கள் இந்த பிளாட்டில் அனைத்து விதமான வசதிகளும் இவருக்கு உள்ளது.
கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சமையல்காரர் அமையும் அந்த அப்பார்ட்மெண்டில் வேலைக்கு நியமித்து இருக்கிறார்கள் எனவே வாரத்தின் ஏழு நாட்களில் 6 நாட்கள் மும்பை வார்த்தையாக மாறிவிட்டது சேதுபதி தனது குடும்பத்தை பார்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னை வந்து செல்கிறார்.
அந்த ஒரு நாள் மட்டுமே சில மணி நேரங்கள் குழந்தைகளோடும் மனைவியோடும் நேரத்தை செலவிடும் இவர் மீண்டும் மும்பைக்கு சென்று விடுகிறார். தற்போது தமிழகத்தில் இருப்பதுபோலவே அவருக்கு ரசிகர் பட்டாளம் மும்பையிலும் உள்ளதாம்.
மேலும் விஜய் சேதுபதி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள முக்கியமான சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்திருக்கிறார் மக்கள் மத்தியில் மிகச்சிறந்த பெயரை பெற்றிருக்கும் இவர் மக்கள் செல்வன் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
இவரின் கடுமையான உழைப்பால் இன்று பல படங்களை கைவசம் வைத்து பாலிவுட்டிலும் தனது நடிப்பில் கலக்கி வர கூடிய நிலையில் ஒரு தமிழன் விஜயசேதுபதி இருக்கிறார் என்றால் அது பாராட்டப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும்.