குமுறிய குஞ்சுமோன்..! – 23 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடக்கும் சிம்ரன் படம்..! – ஒகே சொன்ன அஜித், விஜய்..!

விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன் தன்னுடைய இடுப்பை விட்டு விட்டு கன அடி ரசிகர்களின் இதயத்தை ஒரு ஆட்டு ஆட்டியவர் நடிகை சிம்ரன்.

இவரை இடுப்பழகி என்று பலரும் அழைத்தார்கள். இவர் நடிப்பில் உருவான ஒரு திரைப்படம் 23 ஆண்டுகள் ஆகி இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆம் நடிகை சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம் கடந்த 23 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் உருவான இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழில் தென்னவன், ஜாம்பவான், கல்கண்டு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நந்தகுமார் அந்த காலத்திலேயே பிரம்மாண்டமான ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார்.

“கோடீஸ்வரன்” என்று டைட்டிலில் அந்த திரைப்படம் பிரபல தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரிக்க முன்வந்தார். அப்போது விஜய் அஜித் போன்ற நடிகர்கள் ஒருவரை வைத்து படத்தை இயக்க திட்டம் தீட்டி இருந்தனர்.

எனவே, விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறார். நடிகர் விஜயும் கதை பிடித்து போக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் படத்தின் பட்ஜெட் 2 கோடி என இருந்தது.

அந்த காலகட்டத்தில் நடிகர் விஜய் நம்பி 2 கோடியை போடுவதற்கு யாரும் முன்வரவில்லை. அதன்பிறகு, அஜீத்திடம் கதை சொல்ல அவருக்கும் பிடித்திருக்கிறது அவரும் ஒகே சொல்லியுள்ளார்.

நடிகர் அஜித்தை நம்பி தயாரிக்க முன் வந்திருக்கின்றனர். ஆனால் தயாரிப்பாளர் குஞ்சுமோன் என்றது நடிகர் அஜித் இந்த படத்தில் இருந்து பின்வாங்கி விட்டார். அதன் அதன் பிறகு தயாரிப்பாளர் குஞ்சுமோன் தன்னுடைய மகனை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து தயாரித்தார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். பாலிவுட் நடிகை கரீனா கபூரும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி செலவாகி விட்டதால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

படத்தின் பட்ஜெட்டை 2 கோடி தான் அதன் பிறகு மூனே முக்கால் கோடி வரை இழுத்துச் சென்றது. இந்நிலையில், மேற்கொண்டு சில கோடிகளை செலவழிக்க வேண்டும் என்றால் என்னால் முடியாது என தயாரிப்பாளர் குஞ்சுமோன் பின் வாங்கி இருக்கிறார்.

வேறு ஏதாவது தயாரிப்பாளர்கள் அல்லது பைனான்ஸியாரிடம் இருந்து கடன் வாங்கி படத்தை முடித்து விடலாம் என்றால் இந்த படத்தில் ஹீரோ குஞ்சுமோனின் மகன் என்று தெரிந்ததும் யாரும் அவ்வளவு பணத்தை கொடுக்க முன் வரவில்லை. எனவே இந்த திரைப்படம் சரியாக முடிக்கப்படாமல் கை விடப்பட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …