பொன்னியின் செல்வன் : சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து அவரும் அவர் அண்ணன் இணைந்து நடித்து அவர் அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ள படம் தான் நானே வருவேன் திரைப்படம். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தை பொன்னியின் செல்வன் ரிலீசாகும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முந்தைய நாள் வெளியிடுவது என்று கலைப்புலி தாணு திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக அதே அதேநாள் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் படத்தையும் பார்க்க வரலாம் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஒரு சில நம்பத் தகுந்த நபர்களிடம் இந்த படத்தை போட்டு காட்டியிருக்கும் தாணுவிடம் அவர்கள் கூறிய கருத்தில் இந்தப் படத்தின் முதல் பாதி ஆளவந்தான் போலவும், இரண்டாவது பாதி தல அஜித் நடித்த வாலி படத்தின் கதை அம்சத்தை கொண்டிருக்கிறது. அதாவது குடும்பத்தில் இருக்கக்கூடிய அண்ணன் தன் தம்பியின் மனைவியை விரும்புகிறார். இதை ஒட்டித்தான் அந்தக் கதை அதாவது நானே வருகிறேன் கதை நகருவதாக கூறியிருக்கிறார்கள்.
இந்த படத்தை தனுஷின் ரசிகர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில் கலைப்புலி தாணு இப்போது குழம்பித் தவித்து வருகிறார். அறிவிப்புக்குப் பின்னால் அந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை மாற்றினால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று அவர் புலம்புகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தனுஷ் படம் என்பதால் தேதி தள்ளி வைக்கப்பட்ட பலவிதமான வதந்திகளுக்கு உள்ளாகலாம். இது படத்தை ஓடவிடாமல் செய்யக்கூடிய முக்கிய காரணியாகவும் இருக்கும். எனவே தற்போது தவளை போல் வாயை விட்டு விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார்.
மேலும் இதில் வில்லன் கேரக்டர் மிகவும் பிரமாண்ட முறையில் அமைந்துள்ளது.இது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு இருப்பதால் மக்கள் அதை காண ஆவலாக இருப்பார்கள். இந்த சமயத்தில் அவர்களின் ஆவலை குறைக்கும் வகையில் தேதி ரிலீஸ் தேதி மாற்றம் என்பது மிகப்பெரிய அடியாக இந்த படத்திற்கு இருக்கும் என்று படக்குழு நினைக்கிறது.