தியேட்டர்களுக்கு வரும் திரைப்படத்தை தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்து விமர்சனம் செய்வதில் கூல் சுரேஷ்க்கு நிகர் கூல் சுரேஷ் என்று கூறலாம். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்ற படத்துக்கு செய்திருந்த பாசிட்டிவ் விமர்சனத்தால் அந்தப் படம் மாபெரும் வெற்றியை அடைந்தது என்று சிம்பு தரப்பு கூறிவந்தது.
இந்நிலையில் தற்போது இவர் செய்திருக்கும் விமர்சனத்தை கேட்ட பொதுமக்கள் அவரை தண்டிக்க வேண்டும் என்று அரசல் புரசலாக பேசி வருகிறார்கள். அப்படி என்ன விமர்சனத்தை இவர் கூறியிருந்தார் என்பதை இப்போது பார்க்கலாம்.
18 வயசுல என்ற படத்தில் அறிமுகமாகி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்த காயத்ரி பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். சமீபத்தில் இவர் விஜய் சேதுபதி நடித்த படங்கள் அனைத்தும் மிக சூப்பர் ஹிட்டானதால் இவருக்கென்று ரசிகர்களிடையே ஒரு தனி இடம் இருக்கிறது. குடும்பப்பாங்கான கேரக்டராக இருந்தாலும் சரி வேறு விதமான கேரக்டராக இருந்தாலும் சரி அனைத்தைதிலும் அழகாக நடிக்கக் கூடிய திறன் இந்த பெண்ணிற்கு உள்ளது. மேலும் தமிழை தெளிவாக உச்சரித்துப் பேசக்கூடிய நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர்.
மேலும் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படமான விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து
விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி இவர்கள் கூட்டணியில் அமைந்த நான்காவது திரைப்படமான மாமனிதனில் காயத்ரி விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்தார்.
இந்த கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியான முறையில் அவர் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார். இவரின் நடிப்பு நடிப்பு இதில் பக்காவாக இருந்தது.
இந்த படத்தை விமர்சனம் செய்யும் போதுதான் கூல் சுரேஷ் தன் வாயிலிருந்து காயத்ரி நடிப்புக்கு மிக அதிக அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை தரும்போது காயத்ரி உனக்கு… எனக்கு… பொண்டாட்டி என்பது போன்ற வார்த்தைகளை வாய் நழுவி வீசிவிட்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கூல் சுரேஷின் மீது கடுப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கிறார்கள்.
மேலும் கூல் சுரேஷின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற வார்த்தைகளை இவர் இனிமேல் பயன்படுத்த மாட்டார் என்று ஆணித்தரமாக பேசுவதோடு இவருக்கு எதிராக களம் காண உள்ளார்கள். இதனை உணர்ந்து கூல் சுரேஷ் செயல்பட்டால் அவர் எதிர்காலம் நன்றாக இருக்கும் இல்லை என்றால் கேள்விக்குறிதான்?…