சினிமா குடும்பங்களின் வரிசையில் ஜெயம்ரவி குடும்பத்தினரும் வருவார்கள். ஒரு எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் அந்த வரிசையில் அண்ணன் ஒரு இயக்குனர் தம்பி ஒரு சினிமா நடிகர் இப்படி சினிமா துறையைச் சார்ந்த இவரது குடும்பம் தற்போது இரட்டை சந்தோஷத்தில் திளைக்த கூடிய நிலை இந்த ஆண்டு அவர்களுக்கு அமைந்துள்ளது.
இதற்குக் காரணம் என்னவென்று பார்க்கும் போது மிக பிரம்மாண்ட முறையில் தமிழில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படமானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி மிக சிறப்பாக நடித்திருப்பது அவரது திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.
இவரைப் போலவே அவரது அண்ணனும் தெலுங்கில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வைத்து காட்பாதர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் வரும் அக்டோபர் மாதம் 5 ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இக்குடும்பம் இரட்டை சந்தோஷத்தில் உள்ளது.
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த இரண்டு படங்களும் மிக விரைவில் வர உள்ளதால் இந்தப் படத்தை காணக்கூடிய ஆவலில் ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டுமே இவர்கள் இருவரும் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதால் குடும்பமே இந்த படத்தை எப்போது திரைக்கு வரும் பார்க்கலாம் என்ற ஆவலில் இருக்கிறார்கள்.
திரைக்கு ஆரம்ப காலத்தில் ரவியாக இருந்த ஜெயம் ரவிக்கு, ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் கொடுத்தவர் இவர் அண்ணன் தான். தற்போது தெலுங்கில் இவர் இயக்கி வரும் படத்தில் மிகப் பிரபலமான நடிகர்கள் அனைவரும் நடித்து வருவதால் அவரது கேரியரில் இது ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
மேலும் வரும் விஜய தசமியில் இவர்கள் இருவரின் படங்கள் மாஸ் வெற்றி பெற்றால் அதுவே இவர்கள் வாழ்க்கையில் மிகச் சிறப்பான திருப்பங்களை தரக்கூடிய தருனமாகும் இருக்கும் என அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூறுகிறார்கள்.