நடிகை சாய் பல்லவி-யின் தாராள மனசு..! – பார்த்து கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்..! – வேற லெவல்..!

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இருந்தார் நடிகை சாய் பல்லவி இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. டப் செய்யாமலேயே இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தளவிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் விராட பருவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் கார்கி.

இந்த படத்தை இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்எஸ் சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்திருந்தார் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டார். நடிகை சாய் பல்லவி கதை தேர்ந்தெடுக்கும் முறை தான் தற்பொழுது ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.

அதாவது தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் உங்களுடைய முழு ஸ்கிரிப்டையும் ஜி-மெயிலில் எனக்கு அனுப்புங்கள் என்று கூறுவாராம் நடிகை சாய் பல்லவி. அவர்கள் அனுப்பிய பிறகு பொறுமையாக அந்த கதையை படித்து பார்ப்பாராம் நடிகை சாய் பல்லவி.

கதையைப் படிக்கும்போது அவருக்கு கதை பிடித்து இருந்தால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தி படங்களை ஒப்புக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதேபோலத்தான் கார்கி திரைப்படத்தையும் ஈ-மெயிலில் வாங்கி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

இந்த கதையை பார்த்து பிடித்துப் போன பின் இவர் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் எனக்கு தற்போது சம்பளமே கொடுக்க வேண்டாம். எனக்கு சம்பளமாக கொடுக்க இருக்கும் தொகையை படத்தின் தயாரிப்புக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். படம் வெளியான பிறகு எனக்கு உண்டான சம்பளத்தை கொடுங்கள்.

எனக்கு அட்வான்ஸ் கூட வேண்டாம் என்று கூறி கூறி தயாரிப்பாளர்களை ஆச்சரியத்தில் இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இவருடைய இந்த இந்த செயல் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இந்த காலத்திலும் இப்படி ஒரு நடிகையா..? என்று கிறுகிறுத்துப் போய் கிடக்கின்றனர் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …