பின்னணி பாடகி ஜோனிடா காந்தி சமீபகாலமாக ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். விரைவில் நடிகை நயன்தாரா தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாரா விரைவில் படத் தயாரிப்பில் இறங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் அவர் தயாரிக்க உள்ள முதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாடகி ஜோனிடா காந்தி ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறுகிறார்கள்.
முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அனிருத் மற்றும் ஜோனிடா இருவரும் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகர் அல்லதுஇசையமைப்பாளர் அனிருத் இவர்கள் இருவரில் யாரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை பாடகி ஜோனிடா காந்தி சூர்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது தற்போது திருமணம் ஆகாமல் இருப்பது அனிருத் மட்டும்தான் எனவே நான் அவரை தான் தேர்வு செய்வேன் என்று கூறியிருந்தார்.
இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல இருந்தது. அனிருத்தும் இவரும் காதலிக்கிறார்களா..? கல்யாணம் பண்ணிக்க போறாங்களா..? இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் ஜோனிடா காந்தி சமீபகாலமாக படு கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது.