சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற தொடர்களில் நடித்த சின்னத்திரை கதாநாயகிதான் லட்சுமி வாசுதேவன். இவர் பல சீரியல்களில் மிக அற்புதமான முறையில் நடித்து வருவதால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் ஆக உள்ளார்கள்.
இவருக்கு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று மொபைல் போனில் ஒரு மெசேஜ் வந்துள்ளது அவருக்கு 5 லட்சம் இருப்பதாகவும் அதற்கான லிங்க் இங்கே கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது அதை டவுன்லோட் செய்து பின் கிளிக் செய்தால் மூன்று நாட்களில் பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்பது போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து லக்ஷ்மி வாசுதேவன் தனக்கு எதற்காக 5 லட்சம் பரிசு கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக அந்த லிங்கை கிளிக் செய்து விட்டார் பின்னர் அதைப் பற்றி எதுவும் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டார் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் இவரது மொபைலில் இருந்த போட்டோக்கள் எல்லாமே டவுன்லோட் செய்யப்பட்ட நிலையில் போட்டோக்களை மாஃபிங் செய்து அந்த போட்டோக்களை அவரது வாட்ஸ்அப் குழுவில் இருந்த எங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள் மேலும் சில போட்டோக்கள் இவரது பெற்றோர் மொபைலுக்கு வந்துள்ளது என்று கதறி அழுதுள்ளார்.
மேலும் கவனக்குறைவாக இவர் அந்த லின்க்கை கிளிக் செய்ததால் இது போன்ற அவதிக்கு ஆளாகி இருப்பதாகவும் இதுபோன்ற மெசேஜ்கள் ஏதேனும் உங்கள் மொபைலுக்கு வந்தால் தயவு செய்து படித்து பார்த்து பின் ஆற அமர யோசித்து எதையும் செய்ய வேண்டும். என்னை மாதிரி அவசரப்பட்டு நீங்களும் சிரமப்பட கூடாது என்று அறிவுரை தந்த உள்ளார்.
இதுபோன்ற மெசேஜ்கள் அடிக்கடி உங்களது மொபைல் போனுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ரிப்போர்ட் எனும் ஆப்கனுக்கு சென்று கிளிக் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து அனைவரும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் பணத்திற்காக ஆசைப்பட்டு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது என்று புலம்பித் தள்ளுகிறார்கள். இதுபோன்ற அவஸ்தையில் நீங்கள் சிக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவர் கூறிய அறிவுரையை ஏற்று நடப்பது தான் நல்லது.