என்னப்பா ப்ரோமொஷனுக்கு இத்தனை கோடியா..? – தலை சுத்துதுதே..!

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி நமது திரையரங்குகளில் வரலாற்று காவியமான கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வனை காணலாம். இந்த மாபெரும் திரைக்காவியத்தை சுமார் 500 கோடிக்கு மேல் செலவு செய்து மணிரத்தினம் இயக்கியுள்ளார்.

தற்போது படத்திற்கான பிரமோஷன் வேலைகள் மிகவும் பிரமாண்ட முறையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதை ஒட்டி இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஹைதராபாத், மும்பை,திருவனந்தபுரம் என பல பகுதிகளுக்குச் சென்று படத்தின் பிரமோஷன் பணியை பார்த்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மும்பையில் பட புரமோஷனுக்காக சென்றிருந்த திரிஷாவிற்கு சுமார் இருபத்தி ஏழு லட்சம் ரூபாய் செலவில் வாங்கப் பட்ட புடவையை தான் இந்த புடவையை அணிந்து கொண்டு தான் அவர் அந்த புரமோஷனுக்கு சென்றிருக்கிறார்.

மேலும் திரிஷா தற்போது இந்த பட புரமோஷனுக்கு செல்லும்போதெல்லாம் புடவைகளில் மட்டுமே காட்சியளிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் அணிந்து வரும் புடவை மற்றும் அணிந்த அணிகலன்கள் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களின் அணிகலன்களும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிகிறது.

 இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் அனைவருக்கும் உரிய ஆடைகளை இவரே வாங்கித் தந்ததுதான் பிரமோஷன் நடக்கும் நிகழ்வுகளுக்கு கூட்டிச் செல்வதாக தகவல்கள் தெரிகிறது.

 ஏறக்குறைய பிரமோஷனுக்காக மிக அதிக அளவு பணத்தை மணிரத்தினம் கொட்டி இறைத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்தப்படம் மாபெரும் வெற்றியை பெறும் என்பது அனைவரும் நம்பிக்கையாக உள்ளது.

தமிழர்கள் வரலாற்றை பறைசாற்றக் கூடிய இந்த படம் வளரும் தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துக் கூறக் கூடிய படமாக இருக்கும்.

பல மொழிகளில் வெளிவரக்கூடிய பொன்னியின் செல்வனை ரஜினி யிலிருந்து கடைக்கோடி தமிழன் வரை பார்ப்பதற்கு காத்திருக்கிறார்கள். நிச்சயம் இந்தப் படம் இந்தியாவில் ஒரு பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தி வசூலில் ஒரு பிரமாண்டத்தையும் காட்டும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …