என்னை பிடிக்காதவங்க பண்ற வேலை தான் இது..! – நித்யா மேனன் அதிரடி பதிலடி..!

எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் என்கூட வேலை பார்த்தவர்கள் அப்படி கூறுவது கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகை நித்யா மேனன். என்ன காரணம் என்று வாருங்கள் பார்க்கலாம்.

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன். இந்நிலையில் தன்னைப்பற்றி பரவும் வதந்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ஆகாச கோபுரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை நித்யாமேனன். குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தன்னுடைய அழகான நடிப்பால் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை நித்யா மேனன் மலையாளம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழில் வெப்பம் ஓகே கண்மணி மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நித்யா மேனன் சமீபகாலமாக தன்னுடைய வதந்திகளை பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது என்னை பலரும் திமிர் பிடித்தவள் என்று கூறுகிறார்கள். இயக்குனர்களை மதிக்க மாட்டேன் என்றும் படத்தின் கதையை ஒழுங்காக அமர்ந்து கேட்க மாட்டேன் என்றும் பலவிதமாக வதந்திகளை பரப்புகின்றனர்.

திரையுலகில் எனக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் தான் இதற்கு காரணம். என்னுடன் சேர்ந்து வேலை பார்த்த நான் பணியாற்றிய படங்களில் நடித்தவர்கள் யாராவது இப்படிக் கூறி இருக்கிறார்கள் என்று பாருங்கள். கிடையாது.

நான் யார் படத்தில் நடிக்கவில்லையே யாரெல்லாம் என்னுடைய எதிரிகளோ.. அவர்கள் தான் இப்படியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதில் உண்மை கிடையாது என்று பதில் கொடுத்திருக்கிறார் நடிகை நித்யா மேனன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …