பிரபல நடிகை சானியா அய்யப்பன் சமீபத்தில் கேரளாவில் நடந்த கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது அவரை கண்ட ரசிகர்கள் அவரை தொடக்கூடாத இடங்களில் தொட்டு சீண்டி இருக்கின்றனர்.
இதனால் அரண்டு போன அந்த நடிகை அந்த ரசிகர்களிடம் சீரிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக நடிகைகள் இப்படியான விழாக்களுக்கு வரும்போது கூடவே பத்திற்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருவது வழக்கம்.
ஆனால், வெறும் நான்கு பவுன்சர்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த நடிகை கடை திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறார். காரில் இருந்து இறங்கியதுமே ரசிகர் கூட்டம் இவரை ஈ மொய்ப்பது போல மொய்த்தது. அந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கயவர்கள் அந்த நடிகையை தொடக்கூடாத இடங்களில் தொட்டு அந்த இடத்திலேயே அந்த நடிகையை சீண்டி இருக்கின்றனர்.
இதனால் பதறிப்போன அந்த நடிகையை தன்னிடம் அப்படி நடந்து கொண்ட ஆசாமியிடம் சீரும் வீடியோ காட்சிகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தன்னுடைய இணையப் பக்கங்களில் கருத்தை பதிவு செய்திருக்கிறார் அந்த நடிகை.
அதாவது நான் எத்தனையோ கடை திறப்பு விழாக்களுக்கு எத்தனையோ ஊர்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் இப்படியான ஒரு மோசமான அனுபவத்தை நான் அனுபவித்ததில்லை.
அவருடைய ஆசை இப்போது தனித்து இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். இப்படி அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு பொது இடத்தில் அத்தனை கேமராக்கள் இருக்கும்போதே இப்படியான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் மோசமான உலகம் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
View this post on Instagram
மேலும் போலீசிலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. அங்கு படமாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து அந்த சம்பவத்தில் இடம்பெற்ற கயவர்கள் யார் என்பதை தேடி வருகின்றனர் காவல்துறையினர். இந்த விவகாரம் சினிமாத்துறையினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.