PS 1 – இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கணும்னு கனவு கண்டேன்..! – வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்..!

PS 1 : பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் தோன்றும் கதாபாத்திர வீடியோவை தன் பக்கத்தில் ஷேர் செய்த நடிகர் பிரசன்னா இதில் தான் நடிக்க வேண்டும் என்ற கனவு ஆரம்பத்தில் இருந்தது. மேலும் இந்த நாவல் எப்போது திரைப்படமாக உருவாகும் என்ற கனவு இருந்துள்ளதாகவும்  தற்போது அந்த கனவு நிறைவேறி விட்டது என்று மிகவும் சந்தோசமாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தநிலையில் செப்டம்பர் 30 அன்று திரைக்கு வெளிவரக்கூடிய இந்தப் படத்தில் மிக முக்கியமான பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் குறிப்பாக இந்த படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ்ராஜ்,  சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, ரகுமான்  போன்ற நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளது.

 இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்ய கரிகாலன் ஆக விக்ரமும், வந்தியத் தேவனாக கார்த்தியும், அருள்மொழிவர்மர் ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்திருக்கிறார்கள்.

 5 மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான இந்த தான் இந்தியா திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க பிரகாஷ்காரத் இதற்கான தயாரிப்பை செய்திருக்கிறார்.

 படமானது இரண்டு பகுதிகளாக வெளிவரக்கூடிய நிலையில் தற்போது பிரம்மாண்டமான இந்த முதல் பகுதியை லைக்கா நிறுவனம் தயாரித்து  திரை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது என்று கூறலாம்.

எம்ஜிஆர் காலத்திலிருந்தே பேசப்பட்ட இந்த படம் தற்போது திரைக்கு வந்திருப்பது பல ரசிகர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல பல மிகப் பெரிய நடிகர்களின் இதயத்தில்  சந்தோஷத்தை தந்துள்ளது.

 இந்த படமானது பாக்ஸ் ஆபீஸ் கட்டில் மிகப்பெரிய வெற்றியை அடையும் அது பாகுபலி கேஜிஎப் படங்களின் வரிசையை அடித்து துவம்சம் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இந்தப் படம்  திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவை தாண்டி இவ்வளவு தியேட்டர்களில் முதலில்  தமிழர் காவியம் அரங்கேறுவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …