தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்ளும் ஆர்யா..! – இப்படியே போனா அவ்ளோ தான்..!

 நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய படங்களை தந்தவர் தற்போது என்ன ஆனது இவருக்கு எங்கே சென்று விட்டார் என்று கேள்விகளை கேட்க கூடிய விதத்தில் படங்களில் அவரை காண முடியவில்லை.

 ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேல் இவர் சினிமா துறைக்குள் வந்து ஆகிவிட்டது இவருடைய ரசிகர்கள் இவரை உச்சகட்ட நடிகராக நினைத்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை இதுவரை பெற முடியாமல் திணறி தான் வந்திருக்கிறார்.

 கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான  படம் இவரை திரை உலகின் உச்சாணிக் கொம்புக்கு கொண்டு சென்றது என்று கூறலாம் அந்த அளவுக்கு இந்தப் படம் ஒரு மாபெரும் ஹிட் அவருக்கு கொடுத்ததோடு அல்லாமல் இந்தப் படத்தில் இவர் குத்துச் சண்டை வீரராக நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டுப் பெற்றது. தனது ஒளிய உடல்வாகை இந்தப் படத்துக்காக வலுவாக்கி ஒரு பாடிபில்டராக இந்தப் படத்தில் பிரதிபலித்து இருந்தார்.

 படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் தல அஜித் தளபதி விஜயை போல ஒரு உயர்ந்த அந்தஸ்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரது படங்கள் தொடர் தோல்வியை தான் கொடுத்தது.

 இதனை அடுத்து  சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில்  நடிகர் ஆர்யா நடிப்பில் செப்டம்பர் 5 தில் வெளிவந்த கேப்டன் படம்  கிட்டத்தட்ட 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.

 தொடர்ந்து இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் இந்தப் படமும் ஆர்யாவுக்கு மாபெரும் தோல்வியை கொடுத்து திரை உலக வாழ்க்கையிலிருந்து பின்னுக்கு தள்ளிக் கொண்டு சென்றது.

இனிவரும் படங்களாவது ஆர்யாவுக்கு கை கொடுத்து மீண்டும் பழைய நிலைக்கு அவரை கொண்டு வருமா..? இல்லை இதோடு ஆர்யாவின் திரையுலக வாழ்வு முடிந்து விடுமா..? என்பது போன்ற சந்தேகங்கள் தற்போது திரைத் துறையில் உள்ளோர் இடையே வலுத்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …