மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தின் ரீமேக்கான தெலுங்கு காட்பாதர் படத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் நடித்து வரும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
லூசிபர் என்ற இந்த மலையாள படமானது நடிகர் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் அம்சங்கள் கொண்ட மிகப் பரபரப்பாக பேசப்பட்ட படம் ஆகும் இந்த படத்தில் மஞ்சுவாரியார், விவேக் ஓப்ராய், தாமஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை முன்னணி இயக்குனரான மோகன் ராஜா இயக்கி வருகிறார் இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யதேவ் சுனில், சமுத்திரக்கனி போன்ற முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தசரா திருவிழாவின்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியிடப்படவுள்ளது. இந்தப் படத்தை கொனிடேலா புரொடக்ஷன் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கான பட்ஜெட் மிகவும் அதிகமானது என்று சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகிறார்கள்.
மேலும் ரசிகர்களின் கருத்துக்கு ஏற்றபடி சிரஞ்சீவி இதில் பட்டையை கிளப்பியிருப்பார் என தெரியவருகிறது மோகன்லால் மலையாளத்தில் போலீசை தாக்கும் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை விட ஒரு படி மேலே சிரஞ்சீவியின் நடிப்பை தெலுங்கு எதிர்பார்க்கலாம்.
இதில் பேசப்படும் அரசியல் வசனங்கள் தற்போது வெளிவந்துள்ள டிரெய்லரில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
மலையாளத்தில் சொல்லப்படாத சில விஷயங்களும் தெலுங்கு படமான இதில் கூறப்பட்டிருக்கிறது நிஜமான சீன்கள் சிரஞ்சீவியாக இதில் கூடுதலாக இடம் பெற்றிருப்பதால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் கூடிய வாய்ப்புகள் உள்ளது இந்த டிரெய்லரில் வெளிப்பட்டிருக்கிறது.
எனவே கண்டிப்பாக சிரஞ்சீவியின் திரை உலக வாழ்வில் இந்த படம் முக்கிய இடத்தை பெறும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.