இந்த வயசிலும் ஆளு பார்க்க இன்னும் அப்படியே அதே இளமையோடு தான் இருக்காங்க . இந்த டயலாக்கை ரஜினிக்காக படையப்பாவில் நீலாம்பரி பேசி இருப்பார். இந்த டயலாக் தற்போது மிக பொருத்தமாக நடிகை திரிஷாவுக்கு பொருந்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
நடிகை திரிஷா தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களில் மிக சிறந்த நடிகையாக வலம் வந்தவர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இடத்தை பிடிப்பதற்கு முன்பே இவர் திரையுலகில் மிக நேர்த்தியான முறையில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
இவர் தல அஜித்துடன் நடித்த படங்கள் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.
இவர் தமிழர் காவியமான பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்திருக்கிறார். இந்த படத்திலும் இவர் அழகு மேலும் மெருகேறி உள்ளது என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு சீனிலும் இவருடைய நடிப்பு பட்டையை கிளப்பி உள்ளது.
இதைப்பார்த்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எங்கே தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்க திரிஷா வந்து விட்டாரா? என்ற பயத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
பொன்னியின் செல்வனை அடுத்து திரிஷாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் எல்லா மொழிகளிலிருந்தும் கிடைக்கும் என தெரிய வந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோவை பார்த்து விட்டு நின்று ஹார்ட் டே நின்றுவிடும்போல் இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
40 வயதிலும் எந்த அளவுக்கு இளமையாய் என்று அனைவரையும் கண்களை அகல விரித்து பார்க்க வைத்திருக்கக் கூடிய இந்த போட்டோக்களுக்கு அதிக அளவில் தற்போது லைக் குவிந்து வருகிறது.
இதனை தொடர்ந்து இந்த போட்டோக்களை பார்த்து வரும் ரசிகர்கள் எப்படி இப்படி என்று பலவிதமாக கலாய்த்து வருவதோடு அதிக கமெண்ட்களையும் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் இது மிகவும் வைரலாகி வருகின்றது.