அடுத்த கட்டத்திற்கு சென்ற நாட்டுபுற பாடல் ஜோடி செந்தில் – ராஜலக்ஷ்மி..! – என்னன்னு பாருங்க..!

பொதுவாகவே அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வரிசையில் கிராமிய பாடல்களைப் பாடி நமது நெஞ்சில் நீங்காத இடம் பிடித்திருக்கும்  ராஜலட்சுமி செந்தில் தற்போது அசத்தலாக வீட்டை கட்டியிருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றி அமைத்து அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் இவர்கள் இருவரும் மிகப்பெரிய இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

 தற்போது இவர்கள் இருவரும் சினிமாவில் பின்னணி பாடகராகவும் பாடகியாகவும் ஜொலித்து வரக்கூடிய வேளையில் இவர்கள் சொந்தமாக வீடு கட்டி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெறும் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடி மக்களை மனதால் கவர்ந்து இழுத்த பெருமை இவர்கள் இருவரையும் சாரும்.

 சமீபத்தில் புஷ்பா படத்தில் வெளிவந்த சாமி பாடல் யாராலும் மறக்க முடியாது. பட்டிதொட்டியெங்கும் தற்போது இந்த பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது என்றால் அந்த குரலுக்கு காரணமான இவர்களின் இவர்களை யாரும் விரைவில் மறக்க மாட்டார்கள்.

 தற்போது தான் இவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு காதணி திருவிழாவை நடத்தினார்கள். அதையடுத்து தற்போது மீண்டும் வீட்டில் கிரகப்பிரவேசம் செய்திருக்கிறார்கள்.

 தனது வீட்டின் கிரகப்பிரவேசத்தின் சமயத்தில் வீட்டின் திறப்பு விழாவுக்காக சூப்பர் சிங்கர் இயக்குனர் ரூபா அவர்களை அழைத்து விழாவை நடத்தியது இவர்களது நன்றி உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் ஆரம்ப காலகட்டத்தில் கண்டாங்கி சேலைகள் காட்சியளித்த ராஜலட்சுமி தற்போது மாடர்ன் உடையிலும் வலம் வர ஆரம்பித்து விட்டார். காசு வந்த பின்னால் இப்படி மாறிவிட்டார் என்ற கேள்விகளுக்கு அவர் பதிலாக இடத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றி இருப்பதாக பொறுமையாக கூறியிருப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது.

 தற்போது இவர்களது பிரம்மாண்டமான அந்த கனவு இல்லத்தை வலைதளங்களில் பார்க்கும் அனைவரும் மிகவும் சந்தோஷத்தோடு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …