தீபிகா படுகோனே : நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் ஒரு சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெருவதும் வழக்கமான ஒன்றுதான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட காதலித்து திருமணம் செய்து கொண்ட தெலுங்கு முன்னணி நடிகரின் மகனும் நடிகரமான நாகசைதன்யா சமந்தா ஜோடி விவாகரத்து பெற்றது சமூக வலைதளங்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போது நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி வந்ததும் அவர்கள் எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்வார்கள்? அவர்களது விவாகரத்து செய்தி எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது அப்படி ஒரு பிரபல ஜோடி அதுவும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான ரன்பீர் மற்றும் தீபிகா படுகோனேவின் விவாகரத்து குறித்த சர்ச்சையை சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படும் பொருளாக உள்ளது.
நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்பீர் ஆறு ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 இல் திருமணம் செய்து கொண்டார்கள்.
அவர்களது திருமண வாழ்க்கை என்னவோ சந்தோஷமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது, ஆனால் இருவரும் தங்கள் படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் அடிக்கடி தீபிகாவிற்கு உடல்நல குறைபாடு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிக்கடி தீபிகா மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் என்னால் அவர்களது குடும்ப வாழ்க்கை அவ்வளவு சரியாக இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூடிய விரைவில் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே தம்பதியினர் விவாகரத்து செய்யப்போவதாகவும் கருத்துக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தங்களைப் பற்றி வெளிவரும் விவாகரத்து போன்ற சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக ரன்வீர் மற்றும் தீபிகா தம்பதியினர் பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அப்படி இதில் ரன்வீர் கபூர் முழுக்க முழுக்க பிங்க் நிற ஆடையுடன் பார்ப்பதற்கு படு ஹாண்ட்சம் ஆக தோன்றியுள்ளார். இப்பதிவிற்கு ரசிகர்கள் மட்டுமின்றி தீபிகா அவர்களும் “சாப்பிடக்கூடியது” என்று கமெண்ட் செய்துள்ளார். மனைவியின் அப்பதிவிற்கு பதிலாக ரன்வீர் “முத்தம்” என்று ரிப்ளை செய்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த நட்சத்திர ஜோடிகள்.