வெள்ளித் திரையில் நடிகர்களுக்கு எவ்வளவு ரசிகர்களும் வரவேற்பும் உள்ளதோ அதைப்போல சின்னத்திரை நடிகர் கார்த்திக் ராஜ்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் வரவேற்பும் உள்ளது.
சொல்லப்போனால் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற பல பிரபலங்கள் தங்களது திரை பயணத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ஜீவா தொகுப்பாளினியாக இருந்த நயன்தாரா மேலும் பல பிரபலங்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
சின்னத்திரையில் பிரபல சேனல்கள் ஆனா விஜய் டிவி, சன் டிவி, ஜீ டிவி போன்றவற்றில் சீரியல்களில் பல பேர் நடித்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் கார்த்திக் ராஜ் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.
அவரது எதார்த்த நடிப்பு அனைவருக்கும் பிடித்தது, இவருக்கு மேலும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது ஜீ டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்னும் சீரியலை ஆகும்.
இத்தொடரில் இவர் ஆதி என்னும் கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்திருந்தார், அக்கதாபாத்திரத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகைகள் பட்டாளம் உருவானது என்பதே உண்மை.
அந்த அளவிற்கு தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாகவும் உள்வாங்கியும் நடித்திருப்பார். பிறகு ஏனோ தொடரில் இருந்து அவர் விலகி சொந்தமாக ஒரு படம் தயாரித்து நடித்தார்.
அதற்காக ரசிகர்கள் அவருக்கு உதவியும் செய்தார்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாகவும் தனது அனைத்து செயல்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருபவர்.
சீரியல் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த அளவிற்கு அவரால் வெள்ளித் திரையில் சாதிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் அவர் சீரியலில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்செய்தி வெளியானதும் ரசிகர்கள் அவர் நடிக்கவிருக்கும் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தொடர் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எப்படியோ கார்த்திக் மீண்டும் சீரியலுக்கு வந்து சிறந்த தொடர்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களிடையே ஆர்வம் பெருகி உள்ளது.