இரண்டு இயக்குனர்களுக்குள்.. சண்டை மூட்டி விட்ட சினேகா..! – நடந்தே திரும்பி சென்ற இயக்குனர்..!

நடந்த உண்மை என்ன.? என்று தெரியாமல் நான் திட்டிய விஷயத்தை நடிகை சினேகா இயக்குனர் சேரன் இடம் கூறி எனக்கு திட்டு வாங்கி வைத்ததால் நான் ஆட்டோகிராப் திரைப்படத்தில் இருந்து விலகினேன் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்திருக்கிறார்.

இது சினிமா ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் இயக்குனர் சேரனுக்கு துணை இயக்குனராக பணியாற்றி பிறகு சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர்.

இயக்குனர் சேரனின் பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் பாண்டிராஜ். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சேரனுக்கு உதவி இயக்குனராக இருப்பவர்களுக்கு சம்பளம் கிடையாது என்பதுதான்.

சம்பளம் இல்லை என்றாலும் பரவாயில்லை படத்தை இயக்க கூடிய அனுபவம் கிடைக்கும் என்பதற்காக பல இயக்குனர்கள் சேரனிடம் துணை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல இயக்குனர் பாண்டிராஜும் சம்பளமே வாங்காமல் சேரனுக்கு உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

ஆட்டோகிராப் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேட்டியில் பேசிய பாண்டிராஜ், இயக்குனர் சேரனை பொருத்தவரை மிகவும் அன்பான மனிதர். ஆனால், கோபம் வந்து விட்டால் யார் இருக்கிறார்..? என்ன கதை.. என்றெல்லாம் பார்க்க மாட்டார் படப்பிடிப்பு தளமே அதிரும் அளவிற்கு திட்டி தீர்த்து விடுவார்.

அப்படித்தான் ஒரு முறை என்னையும் திட்டினார். அவரிடம் திட்டு வாங்கிய கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் நான் டிரைவர் ஒருவரை திட்டிவிட்டேன். ஆனால் அந்த டிரைவர் ஒன்னுக்கு ரெண்டாக நடிகை சினேகாவிடம் கூறினார்.

ஆனால் நடிகை சினேகா உண்மையாக நடந்தது என்ன..? என்று தெரிந்து கொள்ளாமல் அதை அப்படியே இயக்குனர் சேரன் காதில் பற்ற வைத்துவிட்டார். அதனை தொடர்ந்து சேரனும் என்ன ஏது என்று விசாரிக்காமல் 200 பேர் கூடியிருக்கும் ஒரு இடத்தில் என்னை திட்டி தீர்த்தார்.

தன்மானத்தை இழந்து இனி எங்கு வேலை செய்ய வேண்டாம் என எண்ணி அலுவலகத்திற்கு நடந்தே சென்றேன் என்று கூறியிருக்கிறார் பாண்டிராஜ். மேலும் அந்த கோபத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களிடம் வாய்ப்பு கேட்டேன்.. அவரும் துணை இயக்குனர் வாய்ப்பை உடனே கொடுத்தார்.

அதன் பிறகு அழகி திரைப்படத்தில் அவருக்கு துணை இயக்குனராக வேலை செய்தேன். சேரனிடம் ஒரு துணை இயக்குனராக இல்லாமல் தம்பி போல பழகினேன். ஆனால், அது ஒரு நடிகையால் முடிவுக்கு வந்துவிட்டது. இது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.. என்று பாண்டிராஜ் கூறியுள்ள விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …