சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பாளர்களில் ரசிகர்களின் மிகவும் விருப்பமான தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவருடைய அக்கா பிரியதர்ஷினி. இவரும் நிகழ்ச்சித் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பயணித்து வரும் நடிகை பிரியதர்ஷினி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.
இத்தனை வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும் கூட தற்பொழுதும் இளமையாகவே தோற்றமளிக்கிறார் நடிகை பிரியதர்ஷினி. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சில சீரியல்களில் நடித்து வரும் இவர் சினிமாவில் தாவணிக்கனவுகள் இதயகோயில் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நினைத்திருக்கிறார்.
தொடர்ந்து தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் சினிமாவில் வாய்ப்புகள் குறைவே தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர்.
ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ரிஷி என்ற ஒரு மகனும் இருக்கிறார். தற்போது 44 வயது ஆகிவிட்டது என்றாலும் கூட தற்போது இளமையாகவே தோற்றமளிக்கும் பிரியதர்ஷினி தன்னுடைய இளமையின் ரகசியத்தை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
அதில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் இளமையின் ரகசியம் வேறு எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் இவர் காது முழுவதும் கம்மல் போட்டிருக்கும் விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இது குறித்து அவர் பேசிய பொழுது மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம் ஆடும் போது அதில் நான் ஜெயிக்கும் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு கம்மல் என குத்திக் கொண்டு வந்தேன்.
இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியாக பெற்ற வெற்றி என்னுடைய காது முழுக்க கம்மல் ஆக மாறிவிட்டது என்று கூறி இருக்கிறார். தன்னுடைய வெற்றி பயணத்தில் ஒரு அடையாளமாக இந்த கம்மல்களை நான் பார்க்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.
மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது நீச்சல் உடையில் தன்னுடைய தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.