பிரபல நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் திருமணமான ஒரு சில வருடங்களில் விவாகரத்து செய்யும் திரை பிரபலங்களை பார்த்திருக்கிறோம்.
ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து பயணித்து விட்டு விவாகரத்து பெறுகிறார்களே என்று பலரும் குழம்பித்தான் போனார்கள். இந்நிலையில் தற்போது இருவரும் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் மணமுடித்துக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம் என்ன என்று நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நெருங்கிய வட்டரங்களிடம் விசாரித்த பொழுது அவருடைய குழந்தைகளின் எதிர்கால நலனை கருதியும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் எதிர்கால நலன் கருதியும் நடிகர் ரஜினிகாந்த் எடுத்த முயற்சி தான் இந்த விவாகரத்து முடிவை இருவரும் கைவிட காரணமாக இருந்திருக்கின்றது என்று கூறுகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது என்று கூறுகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இன்னொரு காரணத்தையும் அரசல்புரசலாக கூறுகிறார்கள்.
அது என்னவென்றால் . ஆன்மிகம், ஜோதிடம் உள்ளிட்ட விஷயங்களும் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் . நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் ஜாதகத்தின் படி இருவரும் பிரிந்தாக வேண்டும். இல்லையென்றால் பெரிய சிக்கல் ஒன்று இருக்கிறது என்றும் இவர்களுடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதன் பேரில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் என்றும் விரைவில் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் மீண்டும் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ்-ற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மீண்டும் திருமணம் நடைபெறும் அந்த திருமண சடங்கை செய்தால் தான் இந்த ஜாதகத்தில் இருக்கும் குறைபாடு நீங்கும் என்றும் கூறுகிறார்கள்.
எனவே விரைவில் மீண்டும் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிடமோ..? அல்லது இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததோ..? காரணம் ஏதுவாகக இருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
விரைவில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் தங்களுடைய வாழ்க்கையை சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ரசிகர்கள் தங்களுடைய ஆவலை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.