இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா.
தன்னை விட வயதில் குறைந்தவர் என்பதினால் தனது வீட்டில் உள்ளோர் திருமணத்திற்கு முன்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பலரது சிபாரிசுகள் மூலம் ரஜினிகாந்த் சமாதானம் செய்யப்பட்டு பின்பு இந்த காதல் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஜோராக திருமணம் முடிந்தது.
இதனை அடுத்து இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் நல்ல முறையாக நடந்து கொண்டிருந்த போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். ஒருவர் பெயர் லிங்கா மற்றொருவர் பெயர் யாத்ரா.
இதனையடுத்து அவரது மன வாழ்வில் புயல் வீசும் வண்ணமாக தனுஷின் நடவடிக்கைகள் அமைந்தது. இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன் கணவனான தனுசுடன் இது நிமித்தமாக அடிக்கடி பிரச்சனைகள் செய்வது மற்றும் சண்டைகள் போடுவது வீட்டில் வழக்கமாகிவிட்டது.
பலமுறை எச்சரித்தும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத தனுஷிடம் இருந்து விலகுவது என்று முடிவு செய்து அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பால் இவர்கள் குடும்பம் மட்டுமல்லாமல் திரை உலகில் இருக்கக்கூடியவர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
மேலும் தன் மகளின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்த ரஜினிகாந்த் இரண்டு மகன்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கட்டளையிட்டார். அதை ஏற்றுக் கொள்ளாத ஐஸ்வர்யா தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் யாரும் எந்த கருத்தும் கூற வேண்டாம். அது அவருடைய சுதந்திரம் என்பது போல் பேசி விட்டார்.
தற்போது ரஜினிகாந்த் வீட்டில் கஸ்தூரிராஜா, தனுஷ் ஆகியோர் சேர்த்து சென்று ரஜினியிடம் சமரசம் பேசி இருப்பதாக தெரிகிறது. இந்த மூலம் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது என்ற செய்திகள் வருகிறது.
அப்படி இருவரும் சேர்ந்து வாழ்வது மூலம் அவர்களின் இரண்டு மகன்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இதனை கருத்தில்கொண்டு ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைந்து வாழ்வரா? என்பதை இன்னும் ஒரு சில நாட்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.