நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்போது கிடைத்துள்ள படத்தினால் மிகப் பெரிய அந்தஸ்து கிடைக்கும் என்று திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் தற்போதே எழுந்துவிட்டது.
ஏனெனில் இவர் தற்போது நடிக்க உள்ள படத்தை பற்றிய அறிவிப்பு தான் அதற்கு காரணம். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது.
ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி போன்ற வித்யாசமான படங்களை மக்களுக்கு தந்து மிகப்பெரிய ஆதரவை பெற்ற நிறுவனமாகும். எனவே தான் “ஃபர்கானா” படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். மிக முக்கியமான கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இந்த கேரக்டரின் மூலம் இவருக்கு நல்ல பெயர் அமையும் என்று அனைவரும் கூறுகிறார்கள். மேலும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை தேர்வு செய்யக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்திருப்பது அவருக்கு மிகவும் சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் கிட்டி ,அனுமோல் ஐஸ்வர்யா தாதா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.
இப்படத்தை கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக செயல்பட உள்ளார். மேலும் மென்மையான பாடல்கள் மூலம் அனைவரையும் கட்டி போட்ட ஐஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்திற்கான இசை அமைக்க உள்ளார்.
படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக மனுஷ்யபுத்திரன் உடைய வசனங்கள் இந்த படத்தில் இடம்பெறுவது முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் திரைக்கதையை இயக்குனர்களுடன் இணைந்து கதாசிரியர்கள் ஆன சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்தர் எழுதியுள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று தற்போது முழுமையான நிலையை எட்டியுள்ளது. இதன் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது. கண்டிப்பாக இந்தப் பாடல் மக்களின் மனதை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்பதை படக்குழு தெரிவித்துள்ளது.
இத்தோடு ஒரு வித்தியாசமான கேரக்டரை செய்யப்போகும் ஐஸ்வர்யா ராஜேஷின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.