“முஸ்லீமா மதம் மாறினேன்.. வயித்தில் குழந்தையை குடுத்துட்டு..” – வேற நடிகையுடன் போயிட்டான்.. கதறும் சீரியல் நடிகை..!

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் வெளியட்டுள்ள வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகர் அர்னாவ்.. இவருடைய உண்மையான பெயர் நைனா முகமதுஎன்பதாகும். மேலும், இவருக்கு அம்ஜத்கான், ஆர்யா, யுகி என பல பெயர்கள் இருக்கின்றது.

சீரியலில் நடித்துவரும் இவர் சக சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கு இழைத்த அநீதி குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை திவ்யாவே வீடியோ மூலம் தன்னுடைய வாக்குமூலங்களை கொடுத்திருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா.

இவர் கேளடி கண்மணி மற்றும் மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரும் நடிகர் நைனா முகமது-வும் கடந்த 2014ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற சீரியலில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கான புகைப்படங்கள் சில வாரங்களுக்கு முன்புதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை திவ்யா. மேலும் நான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து சீரியல் நடிகை திவ்யாவுக்கும்.. நடிகர் நைனா முகமது-வுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கக்கூடிய நடிகை திவ்யா அதில் அவர் கூறியிருப்பதாவது, நானும் என் கணவர் அர்ணாவ்-வும் கடந்த 2011ஆம் ஆண்டு மகராசி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களானோம். அதன்பிறகு இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்றை வாங்கினோம். அதற்கான செலவுகள் அனைத்தையும் நானே செய்தேன். கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால், தற்பொழுது என்னுடைய கணவர் செல்லம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அந்த சீரியலில் நடித்துவரும் கூடிய ஒரு நடிகையுடன் தற்போது நெருக்கமாக இருக்கிறார். என்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பு வெளியிடாமல் இருந்த நிலையில் அந்த சீரியல் நடிகையுடன் நெருக்கமாக இருந்து வந்தார் எனவேதான் இந்த எங்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு நான் வெளியிட்டேன்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து அர்ணாவ் என்னை சந்திப்பதை நிறுத்திவிட்டார். என்னுடைய தொடர்புகளை துண்டித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் அந்த நடிகையும் என்னை தொந்தரவு செய்து வருகிறார்.

திருமணமானதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். ஆனால், என்னுடைய கணவருக்கும் அந்த சீரியலில் நடிக்கும் பெண்ணுக்கும் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நான் கர்ப்பமாக இருக்கிறேன். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் அந்த நடிகை என் கணவருடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னை அடித்து உதைத்து கொடுமை படுத்தினார். இதையெல்லாம் செல்லம்மா சீரியல்நடிகை பார்த்து ரசிக்கிறார். என்னுடைய வயிற்றில் அடிபட்டு இருக்கிறது. தற்போது கேஎம்சி மருத்துவமனையில் நான் இருக்கிறேன்.

எனக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என மருத்துவர்கள் சொல்கிறார்கள் .என்னுடைய பணம் முழுதையும் நான் அர்ணாவுக்கு தான் செலவு செய்தேன்.. லட்ச கணக்கில் செலவு செய்துள்ளேன். அவருக்காக நான் முஸ்லிமாகவும் மதம் மாறினேன். எனது கணவர் எனக்கு வேண்டும் எவ்வளவு கொடுமை படுத்தினாலும் சரி அவருக்காக நான் காத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இணையவாசிகள் பலரும் சீரியல் நடிகையும் லவ் ஜிகாத்-தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கும் நடிகர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

மேலும் இந்த நடிகைக்கு முறையான வழியைக் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்னுடைய பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக திவ்யா இப்படி செய்து கொண்டிருக்கிறார்.

திவ்யா வீடியோவில் கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே பொய்யானது என்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார் நடிகர் நைனா முகமது. இந்த விவகாரம் தற்போது சீரியல் வட்டார மட்டுமில்லாமல் சினிமா வட்டாரத்தையும் அதிரவைத்த வருகின்றது.

மேலும் இந்த விவகாரத்தில் இந்த விவகாரத்தை லவ் ஜிகாத் என்று கூறி இணையத்தில் பேசுபொருளாக விவாத பொருளாக மாற்றி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதனால் இந்த விவகாரம் இன்னும் சூடு பிடித்திருக்கிறது இது எங்கே போய் முடிய போகின்றது என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …