பொன்னியின் செல்வனை மகளோடு சென்னை திரையரங்கில் பார்த்த ஐஸ்வர்யா ராய்..!

 பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்காக ஐஸ்வர்யா ராய் தன்  மகளுடன் சென்னை திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் இவர் மிகவும் முக்கியமான கேரக்டரான நந்தினி கேரக்டரை செய்திருக்கிறார்.

 பொன்னியின் செல்வனை அழிப்பதற்காக பழுவேட்டரை ஒரு கருவியாக பயன்படுத்தி சோழ சாம்ராஜ்யத்தை அடியோடு அழிக்க அரண்மனையில் நுழைந்து இந்த பெண் தான் இந்த நந்தினி கேரக்டர்.

 பிரம்மன் மொத்த அழகையும் நந்தினிக்கு கொடுத்து விட்டாரோ என்று சொல்லுமளவுக்கு பேரழகியான நந்தினி வயதான கிழவர் ஆன பழுவேட்டரையர் ஐ திருமணம் செய்து கொண்டு சோழ சாம்ராஜ்யத்திற்குள் எடுத்து வைத்த  காரணமே வீரபாண்டியனின் வாரிசான அமரபுஜந்த பாண்டியனை அரியணையில் ஏற்றி  சோழர்களை பழிதீர்த்துக் கொள்ளத்தான்.

 இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார். இவருடைய அழகு இதில் கூடுதல் சிறப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல் வஞ்சகம் செய்வதில் அந்த கதாபாத்திரம் கண்ணாலே பேசி அதை சரி செய்த விதம்  மிகவும் சிறப்பாக அமைந்தது  ரசிகர்களை கவர்ந்தது.

 இந்தத் திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில் திரிஷா, ஜெயம்ரவி, விக்ரம்  கார்த்திக் போன்ற நடிகர்கள் அனைவருமே திரைப்படம் பார்ப்பதற்காக சென்னை திரையரங்குக்கு வந்து இருந்த சமயத்தில்தான் ஐஸ்வர்யாராய் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.

இந்த திரைப்படமானது ஏறக்குறைய இரண்டு நாட்களில் 250 கோடி அளவு வசூலில் சாதனை புரிந்திருக்கிறது. மேலும் வரை இருக்கக்கூடிய நாட்களில் அதிகளவு வசூலை  வாரி குவித்து கேஜிஎப், ஆர் ஆர் ஆர் போன்ற படங்களின் வசூலை பின்னுக்குத்தள்ளி சாதனை படைக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

பலரின் கனவாக இருந்த இந்த பொன்னியின் செல்வனை திரைக்கு கொண்டுவந்து சேர்த்த பெருமை இயக்குனர் மணிரத்தினத்தின் சாரும்.

 அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவு பொருட்செலவு செய்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் தமிழர் வரலாறு உள்ளவரை திரையுலகில் பேசப்படும்  நிறுவனமாக திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் இந்த படத்தை பார்ப்பதின் மூலம் நம் சோழர்கள் வரலாறு  தெரியும். அதில் வீரம் மட்டுமல்ல அவர்களின் தொழில்நுட்பங்களை எப்படி எல்லாம் அவர்கள் அன்றே பயன்படுத்தினார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …