சத்யராஜ் உயர்ந்த மனிதர் என்ற சொல்லும் அளவிற்கு உயரத்திலும் அவரது திரை வாழ்க்கையிலும் சரி உச்சத்தை தொட்டவர் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அறிமுக நாட்களில் வில்லனாக நடித்து பார்ப்போரை கதிகலங்க வைத்தவர். பின் நாட்களில் நாயகனாக மாறி அனைத்து பெண் ரசிகர்களையும் தன்வசம் ஆகியவர்.
நடிகர் ஆனந்தராஜ் அவர்கள் ஒரு திரைப்பட விழாவில் இவர் மட்டும் கதாநாயகனாக மாறாமல் இருந்திருந்தால் எங்களுக்கு திரைத்துறையில் எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது என்று இவரது நடிப்பை பாராட்டி பேசியுள்ளார்.
ஆம் இவர் வில்லனாகவே தொடர்ந்திருந்தால் அனைத்து வாய்ப்புகளும் இவரை தேடி மட்டுமே வந்திருக்கும் இவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பத்தை பின்பு தான் மற்ற வில்லன் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
வில்லனாக கதாநாயகனாக திரை உலகில் தனக்கான இடத்தை பிடித்திருந்தார். தற்போது தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார்.
இவரது சிறந்த நடிப்பின் காரணமாக இவர் ஏற்று நடிக்கும் சிறிய கதாபாத்திரமும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. தனது குணச்சித்திர நடிப்பால் எத்தகைய கடினமான கதாபாத்திரத்தையும் சுலபமாக கையால கூடிய நேர்த்தியான கலைஞர் ஆவார்.
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் வெகுவாக உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக நடிகர் சத்யராஜிடம் கேட்டபோது, இத் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகவும் அதைக் கேட்ட சங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியானது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இப்படம் தொடர்பான அப்டேட்ஸ் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.என்ன தான் திறமை இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு கோடி மிகவும் அதிகம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.