இந்த படத்தில் இருக்கும் விஜய் பட நடிகை யாருன்னு தெரியுதா…! – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உலக அழகி சுஷ்மிதாசென் நாகார்ஜுனன் உடன் முதலில் இணைந்து  ரட்சகன் படத்தில் முதன் முதலில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இவர் நடிப்பை பார்த்து அனைவரும் அசந்து காரணத்தினால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

 இதனைத் தொடர்ந்து இவர் அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது 46 வயதாகும் சுஷ்மிதாசென் ஹிந்தியில் அதிகளவு படங்களில் நடித்திருக்கிறார்.

 46 வயது ஆகியும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதால் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுயிருக்கிறார்.

 தற்போது படங்களில் காட்டும் அக்கறையை விட அதிக அளவு வெப் தொடர்களில் இவர் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இப்போது திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் கவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் ‘தாலி’ என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்குகிறார்.

 மக்களின் அதிகளவு எதிர்பார்ப்பை தூண்டும் இருக்கக்கூடிய இந்த தொடர் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.இப்போது இதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பிரமித்து இருக்கிறார்கள்.

யாராக இருந்தாலும் இந்த உலகில் கண்ணியமாக வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர்களை பாராட்ட வேண்டும், என்பதுபோல வசனங்களை அதில் பதிவிட்டிருக்கிறார் இதன்மூலம் திருநங்கைகளுக்கு ஒரு மிகப் பெரிய பக்கபலமாக இந்த வெப் தொடர் அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

 இதுபோன்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் இவர் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்  சொல்லி இருக்கின்ற செய்திகளை அவர் கடைபிடித்து வருவதை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

இதுபோன்ற வெப் தொடர்களுக்கும் சமூகச் சீரழிவை எடுத்துக் கூறக்கூடிய படங்களுக்கும் நிச்சயமாக மக்கள் ஆதரவு தருவதோடு நின்றுவிடாமல் கண்ணியமாக அதை முடிந்தவரை  கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …