அஜித்-விஜய் படத்திற்கே டஃப் கொடுத்த பிரசாந்த்… தற்போதய நிலை என்ன தெரியுமா..?

நடிகர் விஜய் போல வாரிசு நடிகராக வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த்.

இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜனின் மகன் ஆவார். சாக்லேட் பாயாக அறிமுகமாகி திரை உலகில் தனக்கென ஓர் இடத்தை தனது சிறந்த நடிப்பால் பெற்ற நடிகர்.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பிரசாந்த். சிறந்த கதை தேர்வு களின் காரணமாக தங்களது கேரியரில் உயர்ந்த இடத்திற்கு சென்றனர் அஜித் மற்றும் விஜய்.ஆனால் சரியான கதைகளை தேர்வு செய்ய தவறுவதால் திரை உலகில் பின்னடைவை அடைந்தார் பிரசாந்த்.

இவர் பெரும் ரசிகை பட்டாளத்தை கொண்ட நடிகர். இவர் நடித்த வைகாசி பொறந்தாச்ச, செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி,காதல் கவிதை, ஹலோ, மஜ்னு, தமிழ்,வின்னர், தமிழ், பூமகள் ஊர்வலம் பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா பெரும் வெற்றி படங்களாக அமைந்தது, மற்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட திரைப்படங்களும் ஆகும்.

ஒரு சில தவறான கதை தேர்வுகளால் இவரது படங்கள் தோல்வியை தழுவியது அதன் பின் சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். பின்பு தமிழ் மொழி தவிர்த்து பிற மொழிகளான தெலுங்கில் சில படங்களில் நடித்தார். குறிப்பாக ராம்சரணுடன் நடித்த வினை  விதை  ராமா என்ற திரைப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பு பெற்று தந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் வெற்றிகரமாக ஓடிய அந்தாதூன் என்னும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். அதற்காக தனது உடல் எடையை குறைத்து கச்சிதமாக ரெடியாகி உள்ளார்.

இனியாவது நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற முடிவுடன் தொடர்ந்து  பிரசாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

எனவே மீண்டும் முன்னணி கதாநாயகனாக மாற முயற்சிக்கும் பிரசாந்த் அவர்களின் முயற்சி வெற்றி அடைய அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …