நடிகை நேஹா கவுடா : விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் சீரியல்களில் பாவம் கணேசன் என்ற சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் நடிகர் நவீன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சீரியலில் குணவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நேஹா கவுடா.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கலை குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறலாம். இவருடைய தந்தை ஒரு ஒப்பனைக் கலைஞர் இவருடைய தாய் சீரியல் நடிகை. குடும்பமே கலைத் துறையைச் சேர்ந்த குடும்பம்தான்.
சமீபத்தில் சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை நேகா கவுடா முன்னதாக இருவரும் பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஐ லவ் யூ என்று பேப்பரில் எழுதி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே என் மீது வீசுவார் என்று கூறியிருந்தார்.
அப்பொழுது அவரை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஒரு முறை பள்ளியில் ஆண்டு விழாவின் போது நடன நிகழ்ச்சி நடைபெற்றது அதில் நாங்கள் இருவரும் ஜோடியாக நடனம் ஆட வேண்டும் என்ற நிபந்தனை.
ஆனால் இவனுக்கு ஜோடியாக ஆட மாட்டேன் என்று அடம் பிடித்தேன். அப்போது மிகவும் சிறு வயது எனக்கு அதன் பிறகு போகப்போக அவரை எனக்கு பிடித்துப் போய்விட்டது. அவரை காதலிக்கவும் தொடங்கினேன் என்று கூறியிருந்தார் நடிகை நேகா கவுடா.
தற்போது தெலுங்கு பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கையான ஒரு விஷயம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.