நயன்தாரா-வுக்கு பிறந்த இரட்டை குழந்தை..! – குழப்பத்தில் ரசிகர்கள்..! – குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இதனை இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதென்னடா கூத்து..? இப்போதான் கல்யாணமானது.. அதுக்குள்ள இரண்டு குழந்தைகளா..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார்கள்..! அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்..! என்ற இரு வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் எங்களுக்கு இரண்டு குழந்தை பிறந்திருக்கிறது என்று மட்டும் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அறிவித்துள்ளார்களே தவிர இந்த குழந்தையை தத்தெடுத்த குழந்தையா..? அல்லது வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட குழந்தையா..? என்பது குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

 

இவருடைய பதிவை பார்க்கும் போது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டிருக்கிறார்கள் என்பது போல தெரிகிறது. எனக்கும் நயன்தாராவுக்கும் குழந்தை பிறந்துள்ளது என்று தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.

இதன் மூலம் வாடகை தாய் மூலமாக நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நிச்சயம் தத்தெடுத்து இருந்தால் குழந்தையை தத்தெடுத்து இருக்கிறோம் என்றுதான் கூறுவார்கள் மற்றும் இல்லாமல் குழந்தைகள் பிஞ்சு குழந்தைகளாக இருக்கின்றன எனவே நிச்சயமாக தத்தெடுத்து இருக்க வாய்ப்பில்லை.

வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கிறார்கள். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது.. உயிரியல் முறையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர்தான் அந்த குழந்தைக்கு தாய் தந்தை. ஆனால், அந்த குழந்தையின் கரு வளர்ந்த இடம் மட்டுமே வேறு ஒரு பெண்ணின் கருவறை.

எனவே உயிரியல் முறையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தான் இந்த குழந்தைக்கு பெற்றோர்களாக அறியப்படுவார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த 9ஆம் தேதி கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தங்களுக்கு எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது என விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது நானும் நயன்தாராவும் அம்மா அப்பா எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கிறது. பிரார்த்தனைகள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதங்களை நல்ல செயல்களால் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கிறது.

உங்கள் அனைவருக்கும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா தனபதி. இதனை பார்த்த , ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்.. அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது உடல் எடையை குறைக்கும் பொழுது ஏற்பட்ட உடல் பிரச்சினை காரணமாக அவர் கருவை சுமக்கும் தகுதியை இழந்து விட்டார் என பல தகவல்கள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை நயன்தாரா நிச்சயமாக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று நயன்தாராவின் திருமணத்திற்கு முன்பே கூறியிருந்தார்.

இந்த கருத்துக்களை எல்லாம் உண்மை என நிரூபிக்கும் வண்ணம் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று இரண்டு குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இது குறித்த முழு விபரம் என்ன ஏது..? என்று எதுவுமே தெரியாமல் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …