நான் உன் பொண்டாட்டியா..? இல்ல, மகளா..? – பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய ரேகா நாயர்..!

பொதுவாக திரை துறையில் இருப்பவர்கள் அனைவரையும் தனது கபளீகரமான  பேச்சால் ஒவ்வொருவரின் மனதையும் துவம்சம் செய்து வரும் பயில்வானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  சின்னத்திரை நடிகை ரேகா நாயர் தைரியமாக பேசி வருகிறார்.

இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய போதிலும் கதைக்கு தேவையான காட்சி என்பதால் தான் நடித்ததாக விளக்கத்தை கூறியிருந்தார்.

இதனை அத்தோடு விட்டுவிடாமல் பயில்வான் ரங்கநாதன் அவருக்குரிய பாணியில் அந்த காட்சியை மிகைப்படுத்தி மேலும் மேலும் ஒரு வீடியோவில் படுமோசமாக பேசி இருந்ததால் ஆத்திரம் அடைந்தார் ரேகா நாயர்.

 இந்த சூழ்நிலையில் எதேச்சையாக இவர் பயில்வான் ரங்கநாதன் சந்தித்தபோது ஏன் இவ்வாறு பேசி வருகிறீர்கள். இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என்பது போல கேள்விகளை எழுப்பிய போது அதற்கு பதிலாக நீ நடித்தை தான் நான் பேசினேன் என்று திமிராக பேசியிருக்கிறார்.

 இதனைத் தொடர்ந்து பஜாரி ஆக மாறிய ரேகா நான் என்ன உன் மனைவியா இல்லை மகளா…  உன் வீட்டில் என்ன சம்பந்தம் நாங்கள் பண்ணியிருக்கிறோமா? என்னைப் பற்றி நீ அவதூறாக பேச என்று அனல் பறக்கும் வார்த்தைகளை வீசத் தொடங்கி விட்டார். இதையடுத்து அந்தப் பகுதியே போர்க்களம் போல் இருந்தது.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வந்த வழியே அனுப்பி வைத்துவிட்டார்கள். இருந்தாலும் இந்த சூடு இன்னும் தணியவில்லை.

 உண்மை நிலை தெரியாமல் இப்படி நடிகைகளை வரிசையாக பேசும் பயில்வான் போன்ற ஆண் வர்க்கத்திற்கு சரியான பதிலடியை ரேகா நாயர் கொடுத்திருக்கிறார் என்று அனைவரும் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

தான் நினைத்ததை வெளிப்படையாக கேட்கக்கூடிய நபர்கள் தற்போது குறைந்து வருகிறார்கள். அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு முதுகில் குத்தும் ஆட்கள் இருக்கும் காலத்தில் இவர் நேரடியாக களம் இறங்கி பயில்வானிடம் கேள்வி கேட்டது வரவேற்கத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …