தலித் மக்களை இழிவு படுத்திய சீரியல் நடிகர் அர்னாவ்-வின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

செல்லம்மா என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்னாவ் என்ற நைனா முகமது. இவருடைய உண்மையான பெயர் நைனா முகமது என்பதாகும். இவர் தன்னை காதலித்து வயிற்றில் கருவை கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக சக சீரியல் நடிகையும் அவருடைய மனைவியுமான திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் தான் தற்போது சின்னத்திரை வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. சன் டிவியில் செவ்வந்தி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்த திவ்யா ஸ்ரீதர் மற்றும் சீரியல் நடிகர் அர்னாவ் இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவரை கழட்டிவிட்டு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் நடிகர் அர்னாவ் என்று நடிகையும் அவரது மனைவியுமான திவ்யா ஸ்ரீதர் பகீர் புகார் ஒன்றை கூறியிருந்தார்.

உச்சகட்டமாக அர்னாவ்-வை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் முஸ்லிமாக மதம் மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய பேச்சைக் கேட்டு நான் முஸ்லிமாக மதம் மாறினேன். என்னுடைய இந்து தர்மத்தை விட்டு விட்டு முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டேன்.

இதனால் தற்போது என்னுடைய குடும்பத்தினரே எனக்கு ஆதரவாக இருக்க மறுக்கிறார்கள். மக்களும் எனக்கு எதிராக பேசுகிறார்கள். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று கண்ணீர் மல்க சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

இவருடைய நிலை கண்டு பலரும் இரக்கப்பட்டாலும் கூட காதலுக்காக மதம் மாறினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும்போதே நீங்கள் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டாமா..? நீங்கள் இத்தனை நாட்களாக பின்தொடர்ந்து வந்த வழிபாட்டு முறையை.. வாழ்க்கை முறையை.. காதல் என்ற பெயரில் ஒருவர் மாற்ற முயலும் போது எப்படி அதனை நீங்கள் விட்டு கொடுத்தீர்கள் என்று பெருவாரியான பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

உங்களுக்கு இது தேவை தான். உங்களுடைய இந்த நிலை மற்ற இளம் பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சமீபகாலமாக இப்படியான சர்ச்சைகள் சீரியல் வட்டாரங்களில் தொடர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடிகர் அர்னாவ் ஒரு பேட்டியில் பேசும்பொழுது என்னுடைய பிரச்சனையில் என் நண்பனும் நடிகருமான ஈஸ்வர் குறுக்கே வருகிறார்.. என்னை மரியாதையுடன் பேசமாட்டான்.. ஏதோ சேரியில் பிறந்தவர் போல பேசுவான்.. நான் என்ன சேரியில் பிறந்தவனா..? என்னிடம் அப்படி பேசுவதற்கு.

சேரியில் பிறந்தவர்கன் போல கெட்ட வார்த்தையில் மோசமான வார்த்தைகள் பேசுவதை அவள் நிறுத்த வேண்டும். நான் எப்படி டீசண்டாக பேசுகிறேன். ஆனால் அவன் அப்படி டீசண்டாக பேசாமல் சேரியில் பிறந்தவன் போல பேசுகிறார் என்று கூறியுள்ளார். இவ்வளவு பேசும் ஈஸ்வர் தன்னுடைய வாழ்கையில் முதலில் ஒழுங்கா இருக்கானா..? என்று பேசியுள்ளார் அர்னாவ். இந்த பேட்டி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

இதனை அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தின் மதுரை மாவட்ட செயலாளர் திரு.மணி அமுதன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவை பகிர்ந்து அர்னாவ்-வின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருப்பதுடன் தலித் மக்களை இழிவுபடுத்தும் தொலைக்காட்சி நடிகர் அர்னாவ்-வை காவல்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவருடைய இந்த பதிவுக்கு இணையவாசிகள் மத்தியில் வரவேற்பு குவிந்து வருகின்றது. பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் இப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை தவறான முறையில் சித்தரிக்க முயல்வது உண்மையிலேயே மிகவும் வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்தமாக அந்த பகுதியில் வாழும் மக்களை இழிவானவர்கள் போல சித்தரிக்க முயல்வதை மனிதனாக பிறந்த எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை பிரபலங்கள் உணர்ந்து கொண்டு பேச வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …