சமந்தா-வா இது..? – அரிதான தோல் நோய் பாதிப்பு..? – வைரலாகும் புகைப்படம்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

இன்ஸ்டாகிராமில் துறுதுறுவென இயங்கி வருகிறார் நடிகை சமந்தா. ஆனால் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு புதிய புகைப்படங்களையோ அல்லது பதிவையோ வெளியிடாமல் இருந்தார்.

இதனால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் காய்ந்துபோய் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவருடைய இன்பாக்ஸை நிரப்பி வைத்து விட்டனர். என்ன ஆனது சமந்தா..? என்ன ஆனது..? எங்கே சென்றீர்கள்..? எங்கே ஒரு பதிவையும் காணோம்..? ஒரு புகைப்படத்தையும் காணோம்…? என்று நச்சரித்து தள்ளிவிட்டனர்.

இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் நடிகை சமந்தா. ரசிகர்களின் அன்புத்தொல்லை என்னை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயமாக மீண்டும் நான் உங்களுடன் பயணிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா மிகவும் அரிதாக ஒரு தோல் நோயினால் பாதிக்கப்படுவதாகவும் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியானது.

அதனை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம். அதனால்தான் அவர் எந்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடாமல் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் தன்னுடைய முகத்தை அழகாக்க நடிகை சமந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

அதனால் தான் தற்பொழுது வினையே வந்து இருக்கிறது. அதனை மீண்டும் சரிசெய்ய அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார் நடிகை சமந்தா என்று கூறினார்கள். நடிகை சமந்தா மிகவும் அரிதாக ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல பரவியது.

இந்நிலையில், அது உண்மை கிடையாது என்று சமந்தா தரப்பு தெளிவாகக் கூறியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை சமந்தாவின் மேனேஜர் மகேந்திரா என்பவர் நடிகை சமந்தா முற்றிலும் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய முகத்தை காட்டாமல் டி-ஷர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு அதில் இருக்கும் வாசகம் மட்டும் பளிச்சென தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பீனிக்ஸ் பறவை பதிந்துள்ள அந்த டி ஷர்ட்டில் நீங்கள் தனியாக செல்லப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். அதாவது ரசிகர்களுடன் இணைந்து இருப்பேன் உங்களைத் தனியாக இருக்க விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சமந்தா. தொடர்ந்து, அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் நடிகை சமந்தா விரைவில் மீண்டும் ஆக்டிவாக சமூக வலைதளங்கள் மற்றும் திரைப்படங்களில் இயங்குவார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகை சமந்தா நலமாக இருக்கிறார் என்றால் முகம் தெரியும் படியே புகைப்படத்தை வெளியிடலாமே இதனால் தன்னுடைய டி-ஷர்ட்டை மட்டும் புகைப்படம் எடுத்து தன்னுடைய முகத்தை மறைத்தபடி வெளியிட்டிருக்கிறார் அப்படி என்றால் இணையத்தில் பரவும் தகவல் உண்மையாக இருக்குமோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த இருக்கின்றார்கள் இதுகுறித்து நடிகை சமந்தா விரைவில் நல்ல தகவல் ஒன்றை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …