எரிக்கரையில் கணவருடன் ரொமான்ஸ்..! – அசரடிக்கும் புன்னகையரசி சினேகா..!

 என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் தன் பாதத்தை பதித்தவர் சினேகா. வசீகரப் பார்வையாலும் அழகான சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்த அழகி என்று கூறலாம். இவர் எப்போதுமே நம்மோடு இருக்கக்கூடிய உடன்பிறப்பு போலத்தான் இவரை பார்க்கும்போதெல்லாம் தோன்றும்.

 தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலுக்கு இவர் நடனம் ஆடிய விதம் இவர் பல் வரிசையை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த விதம் அனைவருக்கும் இன்றுவரை நினைவில் உள்ளது.

 40 வயதை கடந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயானவர் என்று சொன்னால் நம்ப முடியாது.  அந்த அளவுக்கு இன்னும் இளமையாக எவர்கிரீன் ராணியாக காட்சி தரக் கூடிய நிலையில் தான் தற்போது இவர் இருக்கிறார்.

 பட்டுப் புடைவை விளம்பரங்களில் அதிக அளவு தலையை காட்டியவர் சினேகா தான். எத்தனை நடிகைகள் பட்டுபுடவை கட்டினாலும் சினேகா அந்த புடவையை கட்டினால் அதற்கு தனி அழகு வந்துவிடும்.

 தற்போது தொலைக்காட்சிகளில் சில ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக செயல்பட்டு வருகிறார். இதனை அடுத்து இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தோடு இருக்கின்ற புகைப்படம் தற்போது ரசிகர்களின் பார்வையில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவரது வாழ்க்கையில் மென்மேலும் பல நன்மைகள் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் அன்மையில் தான் இவரது பிறந்த நாளும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  பிறந்தநாள் அன்று ரசிகர்கள் பெருவாரியாக வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்திருந்தார்கள். அதற்கு பதில் நன்றியை தெரிவித்து இருந்தார் என்பது சிறப்பான விஷயமாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …