இதனால் தான் கணவரை பிரிந்தாராம் ரச்சிதா மகாலட்சுமி..! – உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னுடைய மனைவி ரச்சிதா மகாலட்சுமி குறித்து தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய கணவர் தினேஷ் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக தொடங்கியது.

என்ன தான் கோலாகலமாக இருந்தாலும் கூட பிக் பாஸ் முதல் இரண்டு சீசன்கள் அளவிற்கு எந்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை என்பது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இவர்கள் 100 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்ற விதி நிஜமாகவே கடைபிடிக்கப்படுகிறதா..? என்ற சந்தேகம்தான்.

இந்த நிகழ்ச்சியின் உண்மை தன்மையை சோதிக்கும் விதமாக பல சம்பவங்கள் நடந்துள்ளனர். எனவே, நம்பகத்தன்மையார்ர ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாறிவிட்டது பிக்பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்படுகிறது இதில் உண்மை தன்மை கிடையாது என்றும் பலரும் கூறுகிறார்கள்.

ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது என்பது உண்மை. அந்த வகையில், தற்போது கிட்டத்தட்ட 20 போட்டியாளர்களுடன் இந்த பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது.

முக்கியமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த டிக்டாக் பிரபலமான ஜி பி முத்து மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோருடன் பல அறிமுகமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் தங்களுடைய இணைய பக்கங்களில் மாறி மாறி பதிவுகளை எழுதி வருகிறார்கள்.

உச்சகட்டமாக ரச்சிதா மகாலட்சுமி கணவர் தினேஷ் எங்களுடைய பிரிவு நிரந்தரமானது அல்ல என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எனவே இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது உறுதியானது.

இதற்கு காரணமாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தாலும் கூட கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி-க்கு 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற ஒரு காரணம் தான் இவருடைய பிரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று பேசுகிறார்கள்.

காரணம் நடிகை ரச்சிதா மகாலட்சுமி குழந்தை பேறு பெற வேண்டுமென்றால் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தை பிறக்கும் நாள் வரை கடுமையான ஓய்வு அவருக்கு தேவை. அலைச்சல் மற்றும் வேறு வேலைகளை செய்வது உள்ளிட்டவற்றை அவர் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவற்றை ரச்சிதா மகாலட்சுமி காதில் கூட போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய நடிப்பு மற்றும் சீரியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஓய்வு எடுப்பதற்கு அவர் தயாராக இல்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

அப்படி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறார் ரச்சிதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள். இணையத்தில் பரவி வரும் தகவல் குறித்து ரச்சிதா அல்லது தினேஷ் இருவரில் யாரவது ஒருவர் வாயை திறந்தால் தான் உண்மை என்ன என்று தெரிய வரும்.

இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டது குறித்து அவருடைய கணவர் அவருக்கு வாழ்த்துக்களையும், இன்னும் நிறைய ரசிகர்களின் இதயங்களை வெல்ல வேண்டுமென்றும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …