விரைவில் முடிவுக்கு வரும் சின்னத்திரை சீரியல் எது தெரியுமா? அடடா… ரோஜா வா…!

சின்னத்திரையை பொருத்தவரையில் நிறைய  சீரியல்கள் தற்போது சினிமா படங்களை விட அதிக அளவு ஓடி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.

 அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களான  சுந்தரி, கயல், வானத்தைப்போல, கண்ணான கண்ணே, ரோஜா போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 இதில் குறிப்பாக ரோஜா தொடரானது டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது திருப்பங்களோடு ரசிகர்களின் மனதை தொடும் படியான காட்சி அமைப்போடு வெளிவருவதால் இதற்கென ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது என்று கூறலாம்.

திரைப்படத்தில் இருப்பது போல ஒரு மசாலா கலவையாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தொடருக்கு தமிழக மக்கள் அதிக அளவு ஆதரவு தந்து இருப்பதால்தான் டிஆர்பி ரேட்டிங்கில் மட்டுமல்லாமல் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் இந்த தொடருக்கு ஒரு தனித்துவம் உள்ளது என்று கூறலாம்.

 மேலும் இந்த தொடரில் வக்கீலாக நடித்து வரும் அர்ஜுன் என்ற கேரக்டரும் அவருக்கு மனைவியாக வருகின்ற ரோஜா கேரக்டரும் தான் சீரியலுக்கு முதுகெலும்பு என்று கூறும்படி இவர்களின் நடிப்பு மிகவும் பிரமாதமாக உள்ளது.

 அதுமட்டுமல்லாமல் படத்தின் முக்கிய பாத்திரங்கள் என்று கூறும் அளவிற்கு பாட்டியாக நடித்தவரும் அம்மாவாக நடித்த காயத்ரியும் மிகப்பெரிய கூடுதல் சிறப்பை எந்த தொடருக்கு தந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

 அந்த அளவுக்கு பக்கபலமாக இவரது நடிப்பு உள்ளது. இதனை அடுத்து விரைவில் என்ற தொடர் முற்றுப்பெறும் என்ற அறிவிப்பு வெளி வந்துள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் கவலைப் படுவதாகத் தெரிகிறது.

அனேகமாக ரோஜாவுக்கு குழந்தை பிறந்தபின் சுபம் என்று போடுவார்கள் என்று ரசிகர்கள் தற்போதைய கணிக்கத் துவங்கிவிட்டார்கள். இதை அடுத்து தான் ரோஜாவை கொலை செய்ய முயற்சி செய்த அனைவரையும் திட்டமிட்டு அர்ஜுன் கொலை செய்து வருகிறார் என்ற போர்வையில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …