விஜய் நடிக்கும் தளபதி 67 ல் நான்கு வில்லன்களா? எப்படி என்ன ஸ்பெஷல்…!

 விஜய் நடித்து வரக்கூடிய வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

 இதனை அடுத்து நேற்று கூட ஸ்ரீமன் வாரிசு படத்தின் டப்பிங் அணிகளை முடிவு செய்து விட்டதாக புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதனை அடுத்து தளபதி விஜய் தனது மகனை அமெரிக்கா  சென்று பார்த்துவிட்டு பின்னர் லண்டன் போன்ற நாடுகளில் ஓய்வெடுப்பதற்காக சென்று வந்த பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மற்றொரு படம் செய்வதால் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு காணப்படுகிறது.

 இந்த நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளி வருவதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதோடு எகிற வைக்கும் எதிர்பார்ப்பை அதை அவர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

 இந்த நிலையில் இந்தப் படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த நான்கு வில்லன்களும் மிகவும் தரமானவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரென்றால் அர்ஜுன், இயக்குனர் கௌதம் மேனன், சஞ்சய்தத் மற்றும் மிஸ்கின் ஆவார்.

தற்போது இந்த நான்கு வில்லன்களின் ரோல் என்ன மற்றும் விஜய் எப்படியெல்லாம் அவர்களை சமாளிக்கப் போகிறார் என்பது போன்ற கதையை பற்றி தான் இப்போது அவரது ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் அதிக அளவு யூகித்து வருவதால் நிச்சயமாக இந்தப் படம் விக்ரம் படத்தை போல மாபெரும் வெற்றியை தரும் என்று கூறலாம்.விக்ரம் படம் அளவுக்கு இது வசூரில் சாதனை புரியுமா என்பதை படம் வெளிவந்த பின்பு தான் நாம் தீர்மானம் செய்ய முடியும்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய்யின் காம்பினேஷனில் எந்த படம் வெற்றி படமாக அமையும் என்று இவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் என்ற படம் இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …