ஆசை ஆசையாய் … நர்மதாவை கரம் பிடித்த மணாளனாய் ஹரிஷ் கல்யாண்…!

பியார் பிரேமா காதல், இஸ் பேடு ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு போன்ற படங்களின் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் ஹரிஷ் கல்யாண்.

 இவர் பிரசாந்த், மாதவன் வரிசையில் தற்போது தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் டீசல் படத்தில் நடித்து வருகிறார்.

 சில நாட்களுக்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமாரை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்திருந்தார். அதனை அடுத்து தற்போது இவரது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

 இதனை அடுத்து பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய இவர் சமூக வலைதள பக்கத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாயத்தை துவங்க உள்ளதாகவும்,அந்த  நல்ல மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.

 மேலும் இவர் தனது மனைவியான நர்மதா உதயகுமார் உடன்  நடந்த திருமணத்தின் சில புகைப்படங்களை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள ஒரு தனியார் திருமண  மண்டபம் ஒன்றில் தான் இந்த திருமணம் நடந்துள்ளது.

 இந்த திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் மிக விமர்சையாக நடைபெற்றதோடு திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது அந்தப் புகைப்படங்கள் வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருவதைப் பார்த்து அனைவரும் அவருக்கு குட் லக் சொல்லி வருகிறார்கள்.

மேலும் இவர் இன்று போல் என்றும் பல்லாண்டு இதே சந்தோஷத்தோடு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் ஆசீர்வாதம் செய்து வருகிறார்கள்.இதனை அடுத்து ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண் .

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …