சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பின்ஸ்சு திரைப்படம் தீபாவளிக்கு வெளியானதை அடுத்து மாபெரும் தோல்வியை சந்தித்தது. மேலும் இந்தப் படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய விதமாக அது அமைந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து இவர் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி சங்கர் ஜோடியாக இருக்கிறார். மேலும் படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கின் நடித்து வருவதை தொடர்ந்து மாவீரன் படம் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது.
இப்போது வெறும் 40 சதவீதமான படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள சூழ்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முன்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தாலும் தற்போது சில காரணங்களால் இந்த ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது.
இதற்கு காரணம் பிரின்ஸ் படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு காரணமாக இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் ஒரு சில கசமுசாக்கள் நடந்ததுதான் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் எந்தச் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறமானவை என்பதற்கு சான்றாக இவர்கள் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்கள். அந்த விளக்கம் என்ன என்றால் உண்மையில் சூட்டிங் நிறுத்த பட காரணம் தற்போது சென்னையில் கன மழை பெய்து வருவதால் மாவீரன் பட சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
எனவே மீண்டும் பட சூட்டிங் திங்கட்கிழமை முதல் எப்போதும் போல் துவங்கும் இதன் மூலம் இயக்குனருக்கும் சிவக்கார்த்திகேயனுக்கும் தனக்கும் இடையே எந்த விதமான மனக்கசப்பு, கைகளப்போ இல்லை அது வெறும் வதந்தி என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
இதனை அடுத்து பரவி வந்த வதந்திக்கு இந்த செய்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இருப்பதால் சிவகார்த்திகேயனின் டேமேஜான பெயர் தற்போது சரியாகிவிட்டது என்று கூறலாம்.